திண்டுக்கல்லில் மாணவர் இந்தியா விழிப்புணர்வு முகாம்…

திண்டுக்கல்லில் இன்று (12.03.17) மாணவர் இந்தியாவின் சார்பில் ‘சமூக நலனில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்’ நடைப்பெற்றது.

இதில் பொது சேவை, பண்பாடு, தன்னம்பிக்கை, நேர்த்தியான செயல்பாடுகள், மாணவர் சமூகத்தின் வாழ்வியல், பெற்றோரின் கடமைகள், மன அழுத்தங்களை தாண்டி தேர்வில் வெற்றி பெறுதல், என பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுனர்கள் சிறப்பாக வகுப்பெடுத்தனர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் 

M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று மாணவர்களின் ஆராவாரத்திற்கிடையே எழுச்சியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியை குருவாம்மாள், ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் பீர்பாஷா, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தோழர் மு.ப. கணேசன், கூடைப்பந்தாட்ட கழகத் தலைவர் யூசுப் அன்சாரி மற்றும் வினோத் ராஜதுறை உள்ளிட்டோர் உரையாற்றினர்.

மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர் இந்தியாவின் தலைமை நிர்வாகிகள் அஸாருதீன், ஜாவீத், பஷீர் அஹமது ஆகியோர் நிகழ்ச்சியை செம்மைப்படுத்தினர்.

மாணவர் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் முகம்மது பிர்தௌஸ், மரியமனோஜ், சதீஸ் குமார், முனாப்தீன், மோகன் காமாட்சி, உமர் முக்தார், ரபிக் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தகவல்;

மாணவர் இந்தியா ஊடகபிரிவு

12.03.2017