​சர்வதேச விசாரனையை விரைவுபடுத்து கைய்யெழுத்து இயக்கம் மஜக பங்கேற்பு!


இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை தாமதிக்காமல் நடத்தப்பட வேண்டும் என முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு குழு சார்பில் கையெழுத்து இயக்கம் 11.3.2017 காலை சரியாக 9.00 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

இதில் நடிகர் சத்யராஜ் அவர்கள் கலந்துகொண்டு  துவக்கி வைத்தார்.  மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில செயலாளர் அ.சாதிக் பாஷா மற்றும் வட சென்னை மாவட்ட செயலாளர் அஜீம், மாவட்ட பொருளாளர் தாஹா மற்றும் பூவிருந்தவல்லி நகர நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.
தகவல் தொழில்நுட்ப அணி

மனிதநேய ஜனநாயக கட்சி

#MJK_IT_WING

வட சென்னை மாவட்டம்