கோவை.ஜூன்.04., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தைதிரும்பபெற வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள்கூட்டமைப்புசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது இப்போராட்டத்தில் மஜக சார்பில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், ஆகியோர் கலந்துகொண்டனர் மேலும் மாவட்ட, பகுதி, கிளை, வார்டு நிர்வாகிகள், மாடு மற்றும் இறைச்சி வியாபாரிகள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்!!! தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 04.06.2017
செய்திகள்
சேலம் மஜக நடத்திய ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி…
சேலம்.ஜுன்.04., இன்று சேலம் ஸ்டோக்ஹால் மண்டபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மஜக சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா தலைமையில், மாவட்ட பொருளாளர் U.அமிர்உசேன் வரவேற்புரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் S.சைய்யத் முஸ்தபா, A.ஷேக் ரபி, Os.பாபு, A.மஹபூப் அலி, A.அம்சத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com. ஜனாப்.யூசூப் பாஷா KMB Granite நிர்வாக இயக்குனர். தோழர்.ஆ.ஜீவானந்தம் மாநில குழு உறுப்பினர் CPI. ஈரோடு பாபு ஷாயின்ஷா மஜக மாநில செயற்குழு உறுப்பினர். திரு.சன்ஜய் குமார் IPS சேலம் மாநகர காவல் ஆனையர். ஜனாப்.S.R.அன்வர் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி. ஜனாப்.ஜமாலுதீன் முஸ்லிம் கல்விசங்க செயலாளர். ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். உடன் மாணவர் இந்தியா அஸ்லம்கான், தொழிற்சங்கம் K.சதாம்உசேன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி அப்ரார் பாஷா ஆகியோர் இருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. சேலம் மாவட்டம். #MJK_IT_WING 04.06.2017
தமிழக அரசுக்கு கண்டனம் .! தஞ்சை விவசாயிகள் பேராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு .!
தஞ்சை.ஜுன்.04., தஞ்சாவூரில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தோழர் P.R.பாண்டியன் தலைமையில் 5 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது . நான்காம் நாளில் போராட்டத்தில் பங்கேற்ற மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மத்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து பேசினார் . தமிழக அரசு மத்திய அரசின் இத்தகையப் போக்குக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவைப் போல சமரசமில்லாமல் செயல்படவேண்டும் என்றார். மே17 இயக்கத் தலைவர் திருமுருகன், மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமன் ஆகியோரின் மீது தமிழக அரசு போட்டிருக்கும் குண்டர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், மாட்டுக்கறி மற்றும் மாடு விற்பனை தொடர்பாக தமிழக அரசும், முதல்வர் எடப்பாடியும் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்றும் சாடினார் . முன்னதாக பேசிய தோழர் P.R.பாண்டியன் அவர்கள், காவிரி போராட்டத்தில் தொடர்ந்து நம்மோடு இயங்கி வருபவர் தமிமுன் அன்சாரி என்றும், சட்டசபையில் காவிரிக்காக சமரசம் இல்லாமல் தொடர்ந்து பேசி வருகிறார் என்றும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மஜக
IIT மாணவன் சூராஜை மஜக தலைவர்கள் நேரில் சந்திப்பு…
சென்னை.ஜுன்.04., சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிஜேபியின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்களால் தாக்குதலுக்குள்ளான IIT மாணவர் சூராஜ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில இளைஞர் அணிச் செயலாளர் J.சமீம் அஹமது ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். கண்ணுக்கு அருகில் எலும்பு முறிவிற்கான அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. அவர் பூரண குணமடைய இறைவனிடம் பிராத்திப்பதாக அவரிடம் கூறினர். உணவு பழக்கத்தை வைத்து மக்களிடையே பிளவு அரசியலை நடத்தும் பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து உறுதியுடன் களமாடுவோம் என்று மஜக சார்பில் சுராஜிடம் கூறப்பட்டது. தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, தலைமையகம் சென்னை #MJK_IT_WING 04.06.2017
மஜக விழுப்புரம் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.
விழுப்புரம்.ஜுன்.04., மாடு, எருது, ஒட்டகங்களை, இறைச்சிக்காகவும், விற்பனைக்காகவும் தடை விதித்த மத்திய பாசிச மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று 04/06/17 ஞாயிற்று கிழமை 10-மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் A.M.இப்ராஹிம் தலைமை தாங்கினார், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் S.முகம்மதுஅலி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்கள். எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com மாநில பொருளாளர் - மஜக குடந்தை அரசன் நிறுவனர் - விடுதலை தமிழ்புலிகள் கட்சி. அ.வ.அப்துல்நாசர் Ex.MLA தலைமை செயற்குழு உறுப்பினர் - தமஜக வழக்கறிஞர். தி.ச.திருமார்பன் மாநில அமைப்பு செயலாளர் - விசிக கடலூர் மன்சூர் தலைமை கழக பேச்சாளர் - மஜக ஆகியோர் மத்திய பாசிச மோடி அரசிற்கு எதிராக அவர்களின் கண்டனங்களை பதிவுசெய்தனர். இந்த கண்டன ஆர்பாட்டதிற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. விழுப்புரம் மாவட்டம். #MJK_IT_WING 04.06.2017