மாட்டிறைச்சி விவகாரம் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!

image

image

image

image

கோவை.ஜூன்.04., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தைதிரும்பபெற
வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அனைத்து  இஸ்லாமிய இயக்கங்கள்கூட்டமைப்புசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது.

மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது

இப்போராட்டத்தில் மஜக சார்பில்  மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான்,  மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன்,  மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், ஆகியோர் கலந்துகொண்டனர்

மேலும் மாவட்ட, பகுதி, கிளை, வார்டு நிர்வாகிகள், மாடு மற்றும் இறைச்சி வியாபாரிகள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்!!!

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்.
04.06.2017