கோவை.ஜூன்.01., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த முற்றுகை போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜெமீஷா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மாவட்ட, பகுதி, கிளை,
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் ( MJVS)
மஜக பொள்ளாச்சி நகர நிர்வாகக்குழு கூட்டம் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு!!
கோவை.மே.21., மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகர நிர்வாகக் குழுகூட்டம் நகர செயலாளர் ஜெமிஷா தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் கோவை பாருக், கோவை மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கு.சுதீர் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர் இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகர அணி மற்றும் வார்டு பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 15+நாளுக்கு ஒருமுறை நிர்வாகக்குழு கூட்டுவது என்று முடிவுசெய்யப்பட்டது! ரமலான் மாதம் முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக நன்கொடையாளர்களை சந்திப்பது என்று முடிவுசெய்யப்பட்டது!! 50க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது!! 40க்கும் மேற்பட்ட புதிய கிளைகள் தொடங்குவது என்று முடிவுசெய்யப்பட்டது!! தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம். #MJK_IT_WING 21.05.2017
கோவை மாவட்ட மஜக நிர்வாகக்குழு! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!!
கோவை.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் T.K.அப்துல் பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS அப்பாஸ், சிங்கை சுலைமான், பாருக், ரபீக், அமீர் அப்பாஸ், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சுதீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1: பொள்ளாச்சி நகர கூடுதல் பொருப்பாளராக ABT பாருக் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 2: 15 நாளுக்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 3: கோவைமாவட்ட அலுவலகம் விரைவில் பிரம்மாண்டமாக திறக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 16.05.2017
கோவை மாவட்ட அனைத்து ஜமாத்கள், கட்சிகள், இயக்கங்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மஜக பங்கேற்பு…
கோவை.மே.13.,நேற்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாத்கள், இஸ்லாமிய இயக்கங்கள், தலித் மற்றும் திராவிட முற்போக்கு இயக்கங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி, தமுமுக, மமக, எஸ்.டி.பி.ஐ, முஸ்லிம்லீக், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், ஜாக், போன்ற பல முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இச்சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் பாரூக் படுகொலைக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் கலையப்பட்டது.! இக்கூட்டத்தில் மஜக சார்பாக மாநில செயலாளர் சுல்தான் அமீர், மாநில கொள்கைவிளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் ரபீக், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாவட்ட செயலாளர் சலீம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் செய்யது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்!! தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 12.05.2017
மஜக தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம்…
தூத்துக்குடி.மே.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று 05-05-2017 மாலை 4மணியளவில் காயல்பட்டினம் ஹனியா மினி ஹால் துபைல் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப் முன்னிலை வகித்தார், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராஸிக் முஸம்மில் வரவேற்புரையாற்றினார்கள். இதில் மாநில செயலாளர் N.A.தைமிய்யா M.Sc மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது மீரா தம்பி ஆகிய இருவரும் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக நகர செயலாளர் S.M.ஜிப்ரி நன்றி உரையாற்றினார் மாவட்டத்தின் பல்வேறு கிளையில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய மாநில செயலாளர் அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி எடுத்துரைத்தார் மேலும் நிர்வாகிகளின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. 1.தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும், கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2.கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், 3.தொடர்ந்து தமிழ் மொழிக்கு விரோதமாக இந்தி தினிப்பில் ஈடுபட்டு