மஜக தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம்…

image

image

image

தூத்துக்குடி.மே.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி  மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று 05-05-2017 மாலை 4மணியளவில் காயல்பட்டினம்
ஹனியா மினி ஹால்
துபைல் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது.
   
இப்பொதுக்குழுவில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார்,
மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப் முன்னிலை வகித்தார், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராஸிக் முஸம்மில் வரவேற்புரையாற்றினார்கள்.

இதில் மாநில செயலாளர் N.A.தைமிய்யா M.Sc மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது மீரா தம்பி ஆகிய இருவரும் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக நகர செயலாளர் S.M.ஜிப்ரி நன்றி உரையாற்றினார்

மாவட்டத்தின் பல்வேறு கிளையில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மாநில செயலாளர் அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி எடுத்துரைத்தார் மேலும் நிர்வாகிகளின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

1.தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும், கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

2.கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்,

3.தொடர்ந்து தமிழ் மொழிக்கு விரோதமாக இந்தி தினிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் தமிழர் விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

4.காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் மூலம் குப்பை சேகரிப்பதற்கு புதிதாக வரி விதித்திருப்பதை கண்டிக்கிறோம், இந்த வரியை திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லாத பட்சத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
தூத்துக்குடி மாவட்டம்
05-05-2017