வட்டாச்சியரை கண்டித்து திண்டுக்கல்லில் மஜக கண்டன ஆர்ப்பாட்டம்..! இணை பொது செயலாளர் பங்கேற்பு…

image

image

image

திண்டுக்கல்.மே.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டும், சர்வாதிகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்ற திண்டுக்கல் கிழக்கு வாட்டாச்சியர் திருமதி கற்பகத்தின் அடாவடிதனத்தை எதிர்த்து கேள்வி கேட்ட.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் யூ.மரைக்காயர் சேட் அவர்கள் மீது போலீசில் பொய் புகார் அளித்து கைது செய்த திண்டுக்கல் கிழக்கு வட்டாசியரை கண்டித்து மாவட்ட செயலாளர் ஏ.ஹபிபுல்லாஹ் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மஜக இணை பொதுச் செயலாளர் கே.எம்.மைதீன் உலவி அவர்களும், மாநில துணைசெயலாளர்
எம்.திண்டுக்கல் அன்சாரி அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அன்பரசு அவர்களும் கண்டன உரை
நிகழ்தினார்கள்.

மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட
நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றியம், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்களும்,
பெண்களும் திரளாக
கலந்துக் கொண்டனர்கள்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
திண்டுக்கல் கிழக்கு.
06.05.2017