சிவகங்கை.செப்.06., இன்று இளையான்குடி சாலையூர் நகரின் புரபஸர் காலனி, இஸ்லாமிய கல்லூரி, கோவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுக்கடையை திறக்க முயற்சித்தனர். அதனையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் உமர் கத்தாப், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலைவகிக்க, மாநில துணை செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் தலைமையில் மதுபானக்கடை முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு வந்த வட்டாட்சியர் அவர்களிடம் மதுபானக்கடை இந்த குடியிருப்பு பகுதியில் திறக்கக்கூடாது எனவும், மீறி மதுக்கடை திறக்கப்பட்டால் மக்களை திரட்டி கடைக்கு பூட்டுப்போட்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அதிவிரைவு காவலர்களும், தாலுகா காவலர்களுடன் இணைந்து, வட்டாட்சியர் அவர்கள் அரசின் திட்டம் மதுபானக்கடையை திறப்பது எனவும், எதிர்ப்பவர்களை அப்புறப்படுத்துமாறும் கூறியவுடன் மக்கள் வெகுன்டெழுந்து கடையை மூடமுயற்சித்தனர். பிறகு காவலர்கள் அரன் அமைத்து கடையை மூடிச்சென்றனர். இளையான்குடி நகரின் அந்த பகுதி மக்கள் உள்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு மதுக்கடையை அடைக்க உதவினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம் 06.09.17
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
அனிதாவின் படுகொலையை கண்டித்து சென்னையில் மஜக சாலை மறியல் – ஏராளமானோர் கைது..!
சென்னை.செப்.03., அரியலூர், குழுமூர் பகுதியை சேர்ந்த சகோதரி அனிதா 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் "நீட்" தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் (தற்)கொலை செய்துக் கொண்டார். மத்திய பாசிச மோடி அரசு கொண்டு வந்த நீட்டை கண்டித்தும், அனிதாவின் படுகொலையை கண்டித்தும் ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஏராளமானோர் கைது செய்யப்படனர். மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, மாநிலச் செயலாளர்களான என்.ஏ.தைமிய்யா, சாதிக் பாட்சா , மாநிலத் துணைச் செயலாளர் சமீம், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் மற்றும், மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள் உட்பட மனிதநேய சொந்தங்கள் உணர்ச்சிப்பூர்வமாக பங்கேற்று கைதாகினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சென்னை 03.09.17
பேரறிவாளனுக்கு பரோல்..! தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை...) 26 ஆண்டுகாலமாக வெஞ்சிறையில் வாடிய பேரறிவாளனுக்கு இன்று பரோல் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.பேரறிவாளனின் அன்புத் தாய் அற்புதம்மாளின் கண்ணீருக்கு நீதி கிடைத்திருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் இதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞகர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தொடர்ந்து பேசி வந்தோம். மாண்புமிகு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்களிடமும், அதனை தொடர்ந்து இன்றைய மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களிடமும் நாங்கள் வலியுறுத்தினோம். இவ்விசயத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு.C.V.சண்முகம் அவர்கள் நாங்கள் எடுத்துவைத்த வாதங்களையும், நியாயங்களையும் புரிந்துகொண்டு செயல்பட்டார். இன்று நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் அவர்களுக்கும் முதல் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இம்முயற்சிக்கு ஆதரவளித்த மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், சட்டசபையில் ஒருமித்து ஆதரவளித்த அதிமுக, திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களுக்கும், இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும், மனிதஉரிமை ஆர்வலர்களுக்கும்,
காவல்துறையின் மெத்தனபோக்கை கண்டித்து சாலைமரியல்..!! மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!!!
திருவண்ணாமலை.ஆக.23., திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பக்கிரிபாளையம் மற்றும் மேல்புழிதியூதிர் கிராமத்தில் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் கொடுரமான முறையில் கொள்ள படுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் காவல் துறையினர் மேத்தன போக்கினை கண்டித்து மாபெரும் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாய கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து திரளாக கொண்ட்டார்கள். குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் முஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மஜக சார்பாக கோரிக்கை விடுத்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ட_அணி #MJK_IT_WING திருவண்ணாமலை மாவட்டம். 23.08.2017.
தூத்துக்குடியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மஜக மனு..!
தூத்துக்குடி.ஆக.07., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக தாமிரபரணி நதிநீர் ஓடும் ஆறாம்பண்ணை மற்றும் கொங்கராயகுறிச்சி பகுதியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் நேரடியாக மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பெற்றுகொண்ட ஆட்சியாளர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் (MJTS) ராஸிக் முஸம்மில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது சபிர் ஆகியோர் இருந்தனர். உடன் கொங்கராயகுறிச்சி ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம். 07-08-2017