சிவகங்கையில் மஜக சார்பில் மதுக்கடை முற்றுகைப் போராட்டம்..!

image

image

சிவகங்கை.செப்.06., இன்று இளையான்குடி சாலையூர் நகரின் புரபஸர் காலனி, இஸ்லாமிய கல்லூரி, கோவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுக்கடையை திறக்க முயற்சித்தனர்.

அதனையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் உமர் கத்தாப், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலைவகிக்க,

மாநில துணை செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் தலைமையில் மதுபானக்கடை முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு வந்த வட்டாட்சியர் அவர்களிடம் மதுபானக்கடை இந்த குடியிருப்பு பகுதியில் திறக்கக்கூடாது எனவும், மீறி மதுக்கடை திறக்கப்பட்டால் மக்களை திரட்டி கடைக்கு பூட்டுப்போட்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் அதிவிரைவு காவலர்களும், தாலுகா காவலர்களுடன் இணைந்து, வட்டாட்சியர் அவர்கள் அரசின் திட்டம் மதுபானக்கடையை திறப்பது எனவும், எதிர்ப்பவர்களை அப்புறப்படுத்துமாறும்  கூறியவுடன் மக்கள் வெகுன்டெழுந்து கடையை மூடமுயற்சித்தனர்.

பிறகு காவலர்கள் அரன் அமைத்து கடையை மூடிச்சென்றனர்.

இளையான்குடி நகரின் அந்த பகுதி மக்கள் உள்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு மதுக்கடையை அடைக்க உதவினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்
06.09.17