ரோஹிங்ய முஸ்லிம்கள் இனப்படுகொலை..! மஜக கடும் கண்டனம்..!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)

மியான்மரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்ந்து இன அழிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு வாராத்திற்கு மேலாக அங்கு மீண்டும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறியர்கள் நடத்தி வரும் கொடூர படுகொலைகள்  உலக மக்களை பதற வைக்கின்றன.

விடுதலை போராளியாக பார்க்கப்பட்ட மியான்மர் தலைவர் ஆங்சாங் சூகி இவ்விஷயத்தில் ஒரு சுயநலவாதியாகவே நடந்துக் கொள்கிறார்.

ராணுவ அதிகாரிகளும் ,சில பௌத்த துறவிகளும் முன்னின்று நடத்தும் அட்டூழியங்களை உலகம் இனியும் வேடிக்கைப் பார்க்ககூடாது.

பார்க்கவே முடியாத கொடூரமான காட்சிகள் உலக தொலைக்காட்சிகளிலும் , வலை தளங்களிலும் காட்டப்படுகின்றன.

இவ்விஷயத்தில் ஐ.நா. கையாலாகாத பொம்மை சபையாகவே இருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை .

இந்திய அரசு இவ்விஷயத்தில் மியான்மர் தூதரை அழைத்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

மேலும் உயிருக்கு அஞ்சி இந்தியாவுக்கு ஓடி வரும் ரோஹிங்ய மக்களுக்கு அகதிகள் அந்தஸ்தை வழங்கி அரவணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் .

மனிதநேய ஜனநாயக கட்சி இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி , ஆர்ப்பாட்டங்களையும், கருத்தியில் பரப்புரைகளையும் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்.
M.தமிமுன்அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி