மஜகவினர் சென்னை ஆலந்தூரில் ரயில் நிலையம் முற்றுகை…!

image

image

image

சென்னை.செப்.07., மனிதநேய ஜனநாயக கட்சி காஞ்சி வடக்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக நீட் தேர்வை எதிர்த்தும், சகோதரி அனிதா படுகொலையை கண்டித்தும் நேற்று (06.09.17) ஆலந்தூர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார் தலைமை தாங்கினார்.

தமிழக உரிமைகளுக்கும் சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி #அனிதாவின்  தற்கொலைக்கு காரணமான மத்திய பா.ஜ.க அரசையும் மாநில பினாமி பா.ஜ.க அரசையும் கண்டித்தும் மஜக மாநில செயலாளர் N.A.தைமிய்யா கண்டன உரையாற்றினார்.

மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாபர், மாவட்ட பொருளாளர் யாகூப், மாவட்டத் துணை செயலாளர் ஆலந்தூர் சலீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மெய்தீன், ஆலந்தூர் நகர செயலாளர் பாரூக் மரைக்காயர் உட்பட மாவட்டம், கிளை மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் என மனிதநேய சொந்தங்கள் அனைவரும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#காஞ்சி_வடக்கு_மாவட்டம்
06.09.17