தூத்துக்குடியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மஜக மனு..!

image

image

தூத்துக்குடி.ஆக.07., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி  தெற்கு மாவட்டம் சார்பாக தாமிரபரணி நதிநீர் ஓடும் ஆறாம்பண்ணை மற்றும் கொங்கராயகுறிச்சி பகுதியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் நேரடியாக மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பெற்றுகொண்ட  ஆட்சியாளர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் (MJTS) ராஸிக் முஸம்மில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது சபிர் ஆகியோர் இருந்தனர்.

உடன் கொங்கராயகுறிச்சி ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.
07-08-2017