நாகை தொகுதி திருமருகல் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு…

ஏப்.30., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சியின் வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகை பாராளுமன்ற உறுப்பினர் கோபால், நாகை தெற்கு மாவட்ட மஜக துணை செயலாளர் யூசுப்தீன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப் மற்றும் மஜக , அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

-மஜக ஊடகப் பிரிவு