பேரறிவாளனுக்கு பரோல்..! தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

image

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை…)

26 ஆண்டுகாலமாக வெஞ்சிறையில் வாடிய பேரறிவாளனுக்கு இன்று பரோல் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.பேரறிவாளனின் அன்புத் தாய் அற்புதம்மாளின் கண்ணீருக்கு நீதி கிடைத்திருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தில் இதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞகர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தொடர்ந்து பேசி வந்தோம்.

மாண்புமிகு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்களிடமும், அதனை தொடர்ந்து இன்றைய மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களிடமும் நாங்கள் வலியுறுத்தினோம்.

இவ்விசயத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு.C.V.சண்முகம் அவர்கள் நாங்கள் எடுத்துவைத்த வாதங்களையும், நியாயங்களையும் புரிந்துகொண்டு செயல்பட்டார்.

இன்று நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் அவர்களுக்கும் முதல் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இம்முயற்சிக்கு ஆதரவளித்த மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், சட்டசபையில் ஒருமித்து ஆதரவளித்த அதிமுக, திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களுக்கும்,

இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும், மனிதஉரிமை ஆர்வலர்களுக்கும், நியாயமான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகளுக்கும், நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோல் நாங்கள் வைத்த மற்றொரு கோரிக்கையான பத்து ஆண்டுகள் நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை வழக்கு பேதம் மற்றும் சாதி-மத-அரசியல் பேதம் பார்க்காமல், பாரத ரத்னா MGR அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பொதுமன்னிப்பில் முன் விடுதலை செய்ய தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்படியார் அவர்களும் ,மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் அவர்களும் ஆவணம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

உ.தனியரசு MLA ,
M.தமிமுன் அன்சாரி MLA , கருணாஸ் MLA