சிறுபான்மையினர் நலம் மற்றும் பல்வேறு திட்டபணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு விழிப்புணர்வு கூட்டத்தில் மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!

image

வேலூர்.ஆக.24., சிறுபான்மையினர் நலம் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு விழிப்புணர்வு கூட்டத்தில் மதவழி சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள்,கிறித்தவர்கள், புத்த மதத்தினர், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஜெயின், ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்களில் மீதான ஆய்வு கூட்டம்  மற்றும் சிறுபான்மையினர்  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான  கூட்டமானது நேற்று 23.08.2017 பிற்பகல் 2.30 மணி அளவில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக  கட்சியின் சார்பாக வேலூர் (கி)  மாவட்ட அமைப்புக் குழு பொறுப்பாளர் M.ஜாகிர் உசேன் கலந்து கொண்டார்.

வேலூர் மாநகர  கொணவட்டம் மதினா நகர் பகுதியில் தெரு விளக்கு அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்று நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
வேலூர் (கி)மாவட்டம்.
24.08.17