அனிதாவின் படுகொலையை கண்டித்து சென்னையில் மஜக சாலை மறியல் – ஏராளமானோர் கைது..!

image

image

image

சென்னை.செப்.03., அரியலூர், குழுமூர் பகுதியை சேர்ந்த சகோதரி அனிதா 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் “நீட்” தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் (தற்)கொலை செய்துக் கொண்டார்.

மத்திய பாசிச மோடி அரசு கொண்டு வந்த நீட்டை கண்டித்தும், அனிதாவின் படுகொலையை கண்டித்தும் ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஏராளமானோர் கைது செய்யப்படனர்.

மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, மாநிலச் செயலாளர்களான என்.ஏ.தைமிய்யா, சாதிக் பாட்சா , மாநிலத் துணைச் செயலாளர் சமீம், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் மற்றும்,

மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள் உட்பட மனிதநேய சொந்தங்கள் உணர்ச்சிப்பூர்வமாக பங்கேற்று கைதாகினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சென்னை
03.09.17