சென்னை.அக்.12., தோழர் வளர்மதியை பெரியார் பல்கலைக்கழகம் தேர்வெழுத அனுமதி மறுத்ததை கண்டித்து இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வளர்மதி தொடர்ச்சியாக பல்கலைக்கழகம் தன் மீது அடக்குமுறைகளை ஏவுவதாகவும், மற்ற மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக தன்னை தேர்வெழுத அனுமதி மறுப்பதாகவும், தன்னை தேர்வெழுத பல்கலைக்கழகம் அனுமதிக்க வேண்டும் என்றும் பேசினார். தொடர்ந்து பேசிய மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மாணவர்களை போராட்ட களங்களுக்கு வரவிடாமல் தடுக்கவே இதுபோன்ற அடக்குமுறைகளை அரசாங்கமும், பல்கலைக்கழகமும் ஈடுபட்டு வருகிறது. இதுவரை பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நடக்கவில்லை என்றும் தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டுமென்று கூறினார். டெல்லியிலும், கேரளாவிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடக்கும்போது தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஏன் மாணவர் சங்க தேர்தல் நடக்கவில்லை என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் சந்திக்காத நெருக்கடியையா எடப்பாடி அரசு சந்தித்துவிட்டது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் "இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தை கணக்கிலெடுக்காமல் அதற்குப் பிறகான
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
ஆதிதிராவிட மாணவ-மாணவியர்களின், கல்வி உரிமையை பறிக்க வேண்டாம்! தமிழக அரசுக்கு மாணவர் இந்தியா வேண்டுகோள்!
ஆதிதிராவிட சமுதாயம் மற்றும் பழங்குடியின சமுதாய மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் திரும்ப செலுத்த அனைத்து கல்வி கட்டணங்களையும் அரசே வழங்கும் என அரசாணை எண் 6 மற்றும் 92 சொல்கிறது. இதனை கலை அறிவியல் கல்லூரிகள் முழுமையாக பின்பற்றவில்லை. ஆனால் பொறியியல் கல்லூரிகள் நடைமுறைப்படுத்தி வந்தன. இது குறித்து நீதியரசர் N.V. பாலசுப்ரமணியம் குழு வடிவமைத்த கட்டணத் தொகை பட்டியலின் மாணவ-மாணவிகளுக்கு கிடைத்ததால் அதில் 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொறியியல் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. தற்போது நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் ஆதிதிராவிட, பழங்குடியின, மதம் மாறிய கிருஸ்துவ மாணவ, மாணவிகளின் உதவித்தொகையை தமிழக அரசு குறைத்து அரசாணையை வெளியிட்டுருக்கிறது. இதனால், இதுவரை பலனடைந்துள்ள மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். பலரின் படிப்பு பாதியிலேயே நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக அரசு இந்த அரசாணையை ரத்து செய்து, பழைய நிலை தொடர ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவண், #A_முஹம்மது_அஸாருதீன், #மாநில_செயலாளர், #மாணவர்_இந்தியா
மஜக திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்..!
திருப்பூர்.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் முக்கிய அஜண்டாவாக வருகின்ற 24_09_2017 ஞாயிற்றுக் கிழமை கோவை மாநகர் மாவட்டம் சார்பில் வின்செண்ட் ரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டது. மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் பேசும் போது தற்போதைய அரசியல் அரங்கில் அதிர்வலைகள் ஏற்படுத்தி வரும் மூன்று MLA க்கள் நமது மஜக பொதுச்செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி_MLA, கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் #உ=தனியரசு_MLA, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் #சேது_கருணாஸ்_MLA, ஆகியோரை சரியான நேரத்தில். இந்த முத்தான மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து கோவை மாவட்ட நிர்வாகம் மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்கள், மேலும் கோவையில் நடைபெறும் பணிகளை பார்த்தால்., நடக்க இருப்பது பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என வியக்கும் வகையில் உள்ளது., பாசிச வாதிகள் மக்களை பிளவு படுத்த துடிக்கும் நேரத்தில்., '' பாசிசத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை வென்றெடுப்போம் " என்ற ஒற்றை முழக்கத்தோடு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர்
மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்..!
கோவை.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் K.செய்யது இப்ராஹிம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் A.அபு, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.சம்சுதீன், சுற்றுச் சூழல் அணி மாவட்ட செயலாளர் AK.முஹம்மது சலீம் மற்றும் பகுதி செயலாளர்கள் பூ.காஜா, ஜமால், ஜாபர் அலி, காஜா உசேன், சமீர் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன... 1.வருகின்ற 24.9.17அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டி சிறப்பாக கூட்டத்தை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 20.09.17
தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கில் மாணவர் இந்தியா..!
வேலூர் செப்.13.,வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள C.அப்துல் ஹக்கிம் பொறியியல் கல்லுரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு CIVIL -O-FEST 2K17 (technical symposium) நேற்று (12.09.2017) நடைபெற்றது. பவுண்டேசன் மார்க்கிங், பேப்பர் பிரசன்டேசன், போஸ்டர் பிரசன்டேசன், பிரிட்ஜ் பேட்டலிங், கூயிஃஜ், ஆடோ கேடு போன்ற பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வேலூர் மற்றும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லுரியிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்று பலனடைந்தனர். இக்கருந்தரங்கிற்கு மாணவர் இந்தியா சார்பாக ஸ்பான்சர்ஷிப் செய்யப்பட்டதற்கு C.அப்துல் ஹக்கிம் பொறியியல் கல்லூர் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. தகவல்; #ஊடகபிரிவு #மாணவர்_இந்தியா 12.09.17