துபையில் மாபெரும் எழுச்சி பலம் காட்டிய மஜக

image

image

ஐக்கிய அரபு அமீரகம்- துபையில் நேற்று (06-01-17) மஜக சார்பு வெளிநாடு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சார்பில் #சமூக_நல்லிணக்க_மாநாடு தனியார் பள்ளி உள் அரங்கத்தில் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது.

#அமீரக_செயலாளர் #மதுக்கூர்_அப்துல்_காதர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அமீரக பொருளாளர் #அதிரை_அஸ்ரப், IKP செயலாளர் #அப்துல்_ரஹ்மான்,
அமீரக துணைச் செயலாளர்கள் #அசாலி_அஹமது, #அபுல்_ஹசன்,#பத்தாஹீல்லாஹ், அமீரக ஊடக பிரிவு செயலாளர் #ஜியாவுல்ஹக்,அமீரக மூத்த ஆலோசகர் #சர்புதீன், அனைத்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அபுதாபி IKP செயலாளர் #சபியுல்லா_மன்பஈ இறைவசனத்துடன் துவக்கினார், அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரெஜாக் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மறைந்த தமிழக முதல்வர் #ஜெயலலிதா_அம்மா அவர்களுடைய பெயர் மாநாட்டு அரங்கத்திற்கு சூட்டப்பட்டிருந்தது.

மாநாட்டில், ஆலியா டிரேடிங் நிர்வாக இயக்ககுநர் சேக்தாவூது, ஆரிபா குழுமம் நிர்வாக இயக்குனர் தோப்புத்துறை சுல்தானுல் ஆரிப், மணமேல்குடி நஜிமுத்தீன்,அபுதாபி தமிழ் சங்கம் ரெஜினால்ட் சாம்ஸன்,சமூக ஆர்வலர் சுகைபூதீன்,இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான்,சமூக ஆர்வலர் குத்தாலம் அஷ்ரப்,மர்ஹபா வெல்பேர் அசோசியேசன் ரஃபி முகம்மது, அபுதாபி லால்பேட்டை ஜமாத் தலைவர் யாசர் அரபாத், நாகை மெய்தீன், தொழிலதிபர் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த சமூக நல்லிணக்க மாநாட்டில்
#மஜக_பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி_MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் #மௌலா_நாசர், துணைப் பொதுச்செயலாளர்கள் #மைதீன்_உலவி,#மதுக்கூர்_ராவுத்தர்ஷா ஆகியோர் பங்கேற்று எழுச்சி உரை நிகழ்த்தினர்.

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள்,வேன்கள் மற்றும் கார்களில் மக்கள் திரண்டு வந்திருந்தனர். இந்துக்கள்,முஸ்லிம்கள்,கிருத்தவர்கள், தலித்துக்கள் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் வாழும் தொழில் அதிபர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள், தொழிலாளர்கள், ஜமாத்தார்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட #மஜக_தலைவர்களை சந்தித்து பேசினர். ஜமாத்தார்கள், பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் மஜக பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி.MLA அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

800 பேரை மட்டுமே எதிர்பார்த்திருந்த நிலையில், அரங்கிற்கு வெளியே 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் கூடுதல் நாற்காலிகள் வரவழைக்கப்பட்டது. பெண்களுக்கென்று தனியாக அமர இட வசதி செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் முக்கியமாக கேள்வி-பதில் நிகழ்ச்சி படு விறுவிறுப்பாக அமைந்தது. கூட்டம் முடிந்து சுமார் 1 மணி நேரம் வரை பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி.MLA பொறுமையாக நின்று கொண்டே தொண்டர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

நிகழ்ச்சியில் இறுதியாக துபை மண்டல செயலாளர் #யூசுப்ஷா நன்றி கூறினார்.

-தகவல்-
மஜக ஊடகப்பிரிவு
ஐக்கிய அரபு அமீரகம்