நாகை. ஏப்.14., சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹாரூன் ரசீது மற்றும் மஜக நிர்வாகிகளின் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்த காவல்துறையை கண்டித்தும் அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து விடுதலை செய்ய கோரியும் நாகை தெற்கு மாவட்ட பொறுப்புகுழு தலைவர் வடகரை M.பரகத் அலி தலைமையில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் திட்டச்சேரி செய்யது ரியாசுதீன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சாகுல் ஹமீது, ஜாகிர் உசேன், முஜிபுர் ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் மன்சூர்,அல்லா பிச்சை, தெத்தி ஆரிப், பிஸ்மி யுசுப்,திருப்புண்டி அஜிஸ், ரெக்ஸ் சுல்தான், ஜலாலுதின், தம்ஜூதீன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இராமதாஸ் , புருனை மண்டல செயலாளர் தாஹா மரைக்காயர் , மஜக பகுருதீன் அலி, மஜக டேவிட் , ஒன்றிய
நாகப்பட்டிணம்
நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் ! நாகூரில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !
நாகை. பிப்.11., இன்று நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் ( MJTS ) நாகை (தெ) மாவட்ட செயலாளர் அல்லா பிச்சை அவர்களின் மகள் திருமணத்தில் பங்கேற்று மஜக செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் பேசிய உரையின் சுருக்கம் பின்வருமாறு:- நாகூர் மக்கள் எனக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்துள்ளார்கள். அதனால் சாதி, மதங்களை கடந்து அனைவருக்கும் நான் பணியாற்றுகிறேன். பல நல திட்டங்களை நாகூரில் அமல்படுத்தி வருகிறேன். காரைக்கால் - வாஞ்சூரில் அமைந்துள்ள மார்க் துறைமுகத்தில் இறக்கப்படும் நிலக்கரி இறக்குமதியால் நாகூர், பட்டிணச்சேரி, பனங்குடி பகுதி மக்கள் பாதிக்கப்படுவதை முதல் முதலில் நான் தான் சட்டமன்றத்தில் பேசினேன் என்பதை அனைவரும் அறிவர். விதிகளை மீறி செயல்படும் மார்க் துறைமுகத்திற்கு எதிராக, நிலக்கரி இறக்குமதியை முற்றிலும் தடை செய்ய கோரி விரைவில் நாகூரில் மஜக சார்பாக பிரம்மாண்டமான போராட்டம் நடத்தப்படும். அது தமிழ்நாடு, புதுச்சேரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும். அதில் தமிழகத்தின் பிரபல தலைவர்கள் பங்கேற்பார்கள். விரிவான ஆலோசனைக்கு பிறகு, அது எத்தகைய போராட்டம் என்பது
மஜக பொதுச் செயலாளருடன்… சமூக மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு !
நாகை. ஜன.24., இன்று நாகையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி யின் பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களை, சமூக மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அம்பி வெங்கடேஷ் அவர்கள் சந்தித்து தன் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்தார். வேளாளர் சமுதாய மக்களை முன்னிருத்தி, செயல்படும் இக்கட்சி சமீபத்தில் முத்தலாக் விவகாரத்தில் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக அறிக்கை விடுத்திருந்தது . சமூக நீதி, தமிழர் வாழ்வுரிமை ஆகிய களங்களில் மஜகவுடன் இணைந்து செயல்படவும் தயராக இருப்பதாக அம்பி வெங்கடேஷ் தெரிவித்தார். அவரது திருமணத்தில் நிச்சயம் பங்கு கொள்வதாகவும் மஜக பொதுச்செயலாளர் தெரிவித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 24.01.2018
மீனவர்கள் பிரச்சனை குறித்து சட்ட மன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் பேச்சு…!
பாகம்:4 (மஜக பெதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கடந்த 08/01/2018 அன்று சட்ட மன்றத்தில் பேசிய உரையின் பகுதி பின் வருமாறு...) கண்ணியாக்குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரள அரசு உதவி செய்தது போல தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என நானும், அண்ணன் உ.தனியரசு MLA அவர்களும் அங்கு சென்று பார்த்து விட்டு கோரிக்கை விடுத்திருந்தோம். மாண்புமிகு முதல்வர் அவர்கள் உயிரிழந்த மீனவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், அரசு வேலை ஒருவருக்கும் வழங்கப்படும் என கூறியிருந்தார்கள். அதற்காக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் ஓகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் இந்த தொகையை கொடுக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். காணாமல் போண மீனவர்களை மீண்டும் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள். குமரி மாவட்ட மீணவர்கள் மட்டும் அல்ல கடலூர் தேவணாம்பட்டு, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் அங்கிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு தொடர்ந்து அந்த மீனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் துரிதம் காட்ட வேண்டும் என்று நான் இந்த நேரத்திலேயே கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம்_சென்னை 18.01.18
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் தேவை…! சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்…!!
(பகுதி - 2) கடந்த 11.01.2018 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டசபையில் பேசியதாவது.., "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழர்கள் உலகமெங்கும் சென்று உழைக்கிறார்கள். வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சென்று உழைக்கிறார்கள். இவர்களது நலனுக்காக தமிழக அரசு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். கேரளா அரசு வெளிநாடு வாழ் மலையாளிகளுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழக அரசும் அப்படி செய்தால் வெளிநாடு வாழ் தமிழர்களும் பயன் அடைவார்கள். தமிழக அரசும் பயன் அடையும். இக்கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 13_01_2018