வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் தேவை…! சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்…!!

image

(பகுதி – 2)

கடந்த 11.01.2018 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டசபையில் பேசியதாவது..,

“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழர்கள் உலகமெங்கும் சென்று உழைக்கிறார்கள். வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சென்று உழைக்கிறார்கள். இவர்களது நலனுக்காக தமிழக அரசு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்.

கேரளா அரசு வெளிநாடு வாழ் மலையாளிகளுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழக அரசும் அப்படி செய்தால் வெளிநாடு வாழ் தமிழர்களும் பயன் அடைவார்கள். தமிழக அரசும் பயன் அடையும். இக்கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
13_01_2018