வேலூர்.ஜூலை.11., இன்று வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரில் மத்திய அரசின் "ஜிஎஸ்டி" வரிக்கு எதிரான அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயளாலர் S.அனீஸ், அலியார், அத்தாவுல்லா - மாநில துணை செயளாலர், அ.இ.சி.பாதுகாப்பு இயக்கம், செளந்தரராஜன் திமுக, P.காத்தவராயன்- CPM, துரைசெல்வம்-CPI, குமரேசன்- விசிக, N.E.கிருஷ்ணன்- வணிகர் சங்க பேரவை, H.ரஹமத்துல்லா கான்.Ex.Mc-முஸ்லிம் லீக் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்புரை தோழர்கள் J.M.வசீம் அக்ரம் - மஜக மாவட்ட செயளாலர், K.லிங்கமுத்து Ex.Mla-CPI, P.சக்திவேல், K.சாமிநாதன்-CPM மாவட்ட செயற்குழு, C.சந்திரன் - விசிக மாவட்ட செயலாளர், V.R.ரபீக் அஹமத்-முஸ்லிம் லீக், முல்லை சுந்தரேசன் - வணிகர் சங்க பேரவை மாநில து செயலாளர் ஆகியோரும்., மற்றும் SMD.நவாஸ் - மஜக மாவட்ட செயலாளர், K.ரவி - திமுக ஒன்றிய. செயலாளர், D.கிருஷ்ணமூர்த்தி-திமுக, P.குணசேகரன்-CPM, S.சம்பத் குமார் - CPM, C.சின்னதம்பி, C.சுப்பிரமணி, B.KS.ரபீக் கான் - மாவட்ட அமைப்பாளர் அ.இ.சி.பாது.இயக்கம், M.J.வாசுதேவன் - விசிக மாவ.செ.தொடர்பாளர், சசிராஜேந்திரன் - து.செ.வணிகர் சங்க பேரவை ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையை
Author: admin
பெங்களூரில் M.C.ராஜ் நினைவேந்தல்_நிகழ்ச்சி! M.தமிமுன் அன்சாரி, திருமாவளவன் பங்கேற்பு..!
பெங்களூர்.ஜூலை.11., விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தி 'CERI' என்ற தேர்தல் சீர்திருத்த அமைப்பை உருவாக்கிய M.C.ராஜ் அவர்கள் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி 10/07/2017 அன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், விசிக இணைப் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன், M.C.ராஜ் அவர்களின் மனைவியும், சமூக செயல்பாட்டாளருமான ஜோதி அம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். M.C.ராஜ் அவர்களின் பணிகளை கூறும் "His Smile had Millions of Meanings" என்ற நூலை M.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிட தோழர்கள் பெற்றுக் கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி. #MJK_IT_WING 10.07.2017
நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய நெய்வேலி! அனைவரையும் அரவணைத்த மஜக!
கடலூர்.ஜூலை.10, கடலூர் (வடக்கு) மாவட்டம் நெய்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ''இதயங்களை இணைக்கும் ஈத்மிலன்" நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எதிரும், புதிருமான கோட்பாடுகளையும், அனுக்குமுறைகளையும் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களை சேர்ந்தவர்களும், மனிதஉரிமை - சமூக நீதி ஆர்வலர்களும் பங்குகொண்டது பெரும்மகிழ்ச்சியை தந்தது. அதிமுக, திமுக, மதிமுக, காங்ரஸ், தமாக, தேமுதிக, பாமக, விசிக, தமிழர் வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், SDPI நாம் தமிழர் கட்சி என பல கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்குகொண்டு "சமூக நல்லிணக்கத்தை" பேசி கைத்தட்டளை வாங்கினர். நாம் ஒருதாய் மக்கள், மதவெறியை வீழ்த்த வேண்டும், எல்லா சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் அனைவரின் வாயில் இருந்தும் கட்சி எல்லைகளை தாண்டி எதிரொலித்தது. நிகழ்ச்சியில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் உற்ச்சாகம் பொங்க பங்கேற்றனர். சால்வைகள் இல்லை, மாலைகள் இல்லை, அரசியல் சவடால்கள் இல்லை ஆனால் எல்லோரின் உணர்வுகளிலும் ஒற்றுமை இருந்தது. மேலும் சமூக சேவையில் பாடுபட்ட K.C.தம்பி (எ) அச்சா, அரிமா சங்க தலைவர் லட்சுமி நாராயணன் போன்றோர்க்கும் அகில இந்திய சிறுபான்மை நல
மஜக திண்டுக்கல் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம்…
திண்டுக்கல்.ஜூலை:10.,நேற்று திண்டுக்கல் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கான நிர்வாக கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் A. அபி, A. அப்துல் காதர் ஜெய்லானி, R.உமர் அலி இவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றன. இதில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் R.M. குத்புதீன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் B. காதர் ஒலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா , இளைஞரனி மாவட்ட செயலாளர் Z.சாகித் கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பிர்தெளஸ், துணைச் செயலாளர்கள் சாகுல், முனாப்தீன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் :- 1) பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர், மாநில பொருளாளர், இணை பொதுச்செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிப்பது. 2) திண்டுக்கல் மீரான் மைதீன் ( சிறைவாசி) அவர்கள் இல்லத்திற்க்கு மாநில நிர்வாகிகள் அனைவரும் சென்று மருத்துவம் அளிப்பது சம்மந்தமாக ஆலோசனை செய்வது . 3) மாநகர நிர்வாகம் கலைக்கப்பட்டு.திண்டுக்கல் மாநகரில் அதிகமான கிளைகள் உருவாக்குவதற்காக பொறுப்புக் குழு அமைக்கப்பட்டன. அக்குழுவின்
மயிலாடுதுறை ஆதனூர் இடையே தடுப்பு அணை கட்ட வலியுறுத்தி கோரிக்கை பேரணி! மஜக பங்கேற்பு..!
நாகை.ஜூலை.9., சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் மயிலாடுதுறை வட்டம் குமாரமங்கலம்-காட்டு மன்னார்குடி வட்டம் ஆதனூர் இடையே தடுப்பு அணை கட்டும் திட்டத்தினை உடனே துவங்க வேண்டும், சீர்காழி உப்பனார் வடிகால் வாய்காலில் கடல்நீர் புகுந்து 20 கி.மீ தூரம் விவசாய நிலங்கள் உப்பு நிலங்களாக மாறி விட்டதை தடுத்திட உப்பானற்றில் இடையே தடுப்பு அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பிரச்சார பேரணி கடலங்குடியில் காலை 10 மணிக்கு துவங்கியது. இதில் க.ராஜ் மோகன் தலைமை தாங்கினாரகள். பிரசாரத்தை மா.ஈழவளவன் துவக்கி வைத்தார். பிரச்சார பேரணி மாலை 2:30 மணியளவில் சீர்காழி வந்தடைந்த போது பழைய பேருந்து நிலையம் அருகாமையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் N.M.மாலிக் கலந்துக்கொண்டு கோரிகக்கைகள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். மற்றும் மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான், கொள்ளிட ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய துணை செயலாளர் ஹலீல் ரஹ்மான் உட்பட மனிதநேய சொந்தங்கள் பலர் கலந்துக்கொண்டனர். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, #MJK_IT_WING மனிதநேய ஜனநாயக கட்சி. நாகை வடக்கு மாவட்டம். 09.07.2017