நாகூர் கடற்கரையில் MLA ஆய்வு

image

நாகூர் கடற்கரையை மேம்படுத்தும் பணியின் தொடக்கமாக சட்டமன்ற உறுப்பினர் M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் நாகூர் கடற்கரையை பார்வையிட்டார்.அவருடன் நாகை நகர்மன்ற தலைவர் #மஞ்சுளா_சந்திரமோகன் அவர்களும் வருகை புரிந்தார்.

கடற்கரை பூங்காவில் படர்ந்திருக்கும் கருவேமரங்களையும்,குப்பைகளையும் அகற்றுவதற்கும்,மின்விளக்குகளை சீர் செய்வதற்கும் அதிகாரிகளிடம் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் நடைபயிற்ச்சி தளம்,நிழற்குடை அமருமிடங்கள்,வணிக கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றுடன் கடற்கரை விரைவில் மேம்படுத்தபடும் என்றும் மக்களிடம் தெரிவித்தார்.

அங்குள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று மணலில் உள்ள குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும் என்றும் ,இரவு நேர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அதே நேரம் இப்பகுதியை பொதுமக்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் நிர்வாகமும், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டும் தான் மாற்றங்களை கொண்டுவர முடியும் என்று கூறினார்.

#நாகூர்_மக்களின்_நீண்டகால_கனவு_நினைவாகிறது

தகவல்:

மஜக_ஊடகப் பிரிவு
நாகை