பெங்களூரில் M.C.ராஜ் நினைவேந்தல்_நிகழ்ச்சி! M.தமிமுன் அன்சாரி, திருமாவளவன் பங்கேற்பு..!

image

image

image

image

பெங்களூர்.ஜூலை.11., விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தி ‘CERI’ என்ற தேர்தல் சீர்திருத்த அமைப்பை உருவாக்கிய M.C.ராஜ் அவர்கள் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி 10/07/2017 அன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, விடுதலை சிறுத்தைகளின்  தலைவர் தொல்.திருமாவளவன், விசிக இணைப் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன், M.C.ராஜ் அவர்களின் மனைவியும், சமூக செயல்பாட்டாளருமான ஜோதி அம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

M.C.ராஜ் அவர்களின் பணிகளை கூறும் “His Smile had Millions of Meanings” என்ற நூலை M.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிட தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப  அணி.
#MJK_IT_WING
10.07.2017