ஈரோடு.ஆகஸ்ட்.04., ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று (03-08-17 ) மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து மஜக வினரை உற்சாகப்படுத்தினார். அடுத்ததாக பவானி நகருக்கு வருகை தந்தவர் அங்கிருக்கும் மஜக அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து அங்கு நடைபெறும் கட்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்து அங்கிருந்து விடைபெற்றார். பிறகு அந்தியூருக்கு சென்ற பொதுச்செயலாளர் அவர்களை பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் சிறப்பான முறையில் வரவேற்றனர். வக்பு நிலம் ஆக்கிரப்பில் உள்ளதை பொதுச்செயலாளருக்கு புகார் மனுவாக கொடுத்தனர். பிறகு அங்கு ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு இடங்களை பார்வையிட்டு, தந்த புகாரையும் ஆய்வு செய்து இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் அமைச்சர் பெருமக்களிடமும் கொண்டு செல்வதாகவும் கூறினார். பிறகு சத்தியமங்கலம் வருகை தந்தவர் அங்கிருந்த பள்ளிவாசலுக்கு சென்றவர் ஜமாத் பெரியவர்களிடமும் இளைஞர்களிடமும் சமுதாய நலன் சார்ந்த கலந்துரையாடலை முடித்து விட்டு, மஜக துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாரூக் அவர்களின் வீட்டிற்கு சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநில துணைச்செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா அவர்களும், மாநில விவசாய அணிச்செயலாளர் நாகை முபாரக் அவர்களும், மாநில
Author: admin
தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வில் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் முழக்கம்! காங்கேயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!
திருப்பூர்.ஆக.03., இன்று தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் காங்கேயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தனியரசு MLA , மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , முக்குலத்து புலிபடை தலைவர் சேது.கருணாஸ் MLA ஆகியோர் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக எழுச்சியுரையாற்றினர். தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும்போது தீரன் சின்னமலையை சமூக நல்லிணக்கத்தின் முன்னோடி என வர்ணித்தார். தீரன் திப்புசுல்தானும் , தீரன் சின்னமலையும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியது குறித்து உயிரோட்டத்தோடு எடுத்து கூறினார். நெப்போலியனுக்கு திப்பு சுல்தான் தூதுக்குழு அனுப்பியபோது அதில் தீரன் சின்னமலையின் மெய்க்காப்பாளரும் , தேவர் சமுதாயத்தை சேர்ந்தவருமான கருப்பசேர்வை இடம் பெற்றிருந்ததை நினைவு கூறினார். அதுபோல் தீரன் சின்னமலையின் படையில் கருப்பசேர்வை , ஓமலூர்.சேமலை படையாச்சி , முட்டுக்கட்டை. பெருமாள்தேவன் , ஃபத்தே முகமது உசேன் உள்ளிட்ட தேவர், கவுண்டர், வன்னியர், நாயக்கர், நாடார், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர்கள் என பல சமூகத்தினரும் இருந்ததை பட்டியலிட்டார். ஐதர் அலிக்கும் , வேலு நாச்சியாருக்கும் இடையே இருந்த இராணுவ சகோதரத்துவ உறவையும், வேலு நாச்சியாரின் மெய்க்காப்பாளராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை
உமறுப்புலவருக்கு விழா! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச் செயலாளர் நன்றி…
சென்னை.ஆக.03., தமிழில் 13-ம் நூற்றாண்டுக்கு பிறகு பெருங்காப்பியங்கள் எழுதப்படவில்லை. 16-ம் நூற்றாண்டில் தான் உமறுப்புலவர் அவர்கள் கீழக்கரையின் வள்ளல் சீதக்காதி உதவியோடு சீறாப்புராணம் நூலை எழுதி அந்த குறையை தீர்த்தார். அவருக்கு வருடம் தோறும் தமிழக அரசு விழா எடுக்கும் என்ற கோரிக்கையை வலியுறுத்துமாறு எட்டயபுரத்தை சேர்ந்த உமறுப்புலவர் சங்கத்தினர் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA விடம் கோரிக்கை வைத்தனர். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி உமா மகேஸ்வரி அவர்களும் இதை வலியுறுத்தினார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இக்கோரிக்கையை M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வலியுறுத்து பேசினார். முதல்வரிடமும் இக்கோரிக்கையை வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து தமிழக அரசு உமறுப்புலவருக்கு வருடந்தோறும் அரசு விழா எடுக்கப்படும் என அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து முதல்வரை சந்திக்க, உமறுப்புலவர் சங்கம், இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகியவற்றின் சார்பில், மஜக பொதுச் செயலாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. முன் கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வில் பங்கேற்க விருப்பதால் தன்னால் வர இயலாது என தெரிவித்தார். இந்நிலையில் தனது கோரிக்கையை ஏற்று உமறுப்புலவருக்கு அரசு விழா எடுக்கப்படும் என அறிவித்ததற்காக முதல்வர் எடப்பாடி கே
உணவு பாதுகாப்பு விதிகள் எளிய மக்களுக்கு எதிரானது…! மஜக கடும் கண்டனம்…!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வோம் என்று மத்திய அரசு அறிவிப்பு செய்ததற்கு, நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது. அதே சமயம் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் அமலுக்கு வருவது குறித்து எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்திய அரசு மெளனம் காக்கிறது இதை கண்டிக்கிறோம். மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வரும் நிலையில், ஏழை மக்களுக்கு ரேஷனில் வழங்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு மானியத்தை குறைப்பது என்றும், அதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பது என்பதும் கிராமப்புற மக்களையும், நகர்ப்புற ஏழை மக்களையும் வெகுவாக பாதிக்கும் எனவே இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஒரு கட்டத்தில் ரேஷன் வினியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கான முன்னோட்ட சதித்திட்டம் என்பதில் ஐயமில்லை. அதே சமயம், தமிழகத்தில் ரேஷன் பொருள்கள் எள்ளளவும் மாற்றமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 01.08.2017
இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் சிறையில் உயிருக்கு போராடி வரும் திண்டுக்கல் மீரான் மைதீன் சிறுநீரகம் தர முன்வந்த மஜக சகோதரன்.
திண்டுக்கல்.ஆக.01., சிறையில் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் கைதி திண்டுக்கல் மீரான் மைதீன். அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய முன் வருபவரை, மதுரை மத்தியச் சிறை சூப்பிரண்டு முன் ஆஜரப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற (மதுரை கிளை) (H.C.R(M D)NO.1115/2017) 15/03/2017.அன்று உத்தரவு பிரப்பித்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று மதுரை மத்தியச் சிறை துணை ஜெயிலர் முன் திண்டுக்கல் மீரான் அவர்களுக்கு சிறுநீரக தானம் செய்ய உள்ள சகோதரர் மீரான் மைதீன் அவர்கள் குடும்பத்தாருடன் ஆஜரானார். விபரங்களை கேட்டறிந்த துணை ஜெயிலர், அரசாங்கத்தின் பார்வைக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் முறையாக அளிப்பதாகக் கூறினார். இந்நிகழ்வின்போது மஜக இணைப் பொதுச் செயலாளர் KM. முகம்மது மைதீன் உலவி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் A. ஹபீபுல்லா, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஷேக் அஹ்மது அப்துல்லா, தின்டுக்கல் மாநகரப் பொறுப்புக் குழு தலைவர் B. காதர்ஒலி, சிறைவாசி திண்டுக்கல் மீரான் அவர்களின் சகோதரர், அவரின் மனைவி உடன் இருந்தனர். கிட்னி பாதிப்பால் உயிர்க்கு போராடும் மீரான் மைதீன் அவர்களுக்கு.இறைவனிடம் மட்டும் இதற்கான கூலியை எதிர்பார்த்தவராக,,, தனது கிட்னியில் ஒன்றை வழங்க முடிவு செய்துள்ள இந்த சகோதரருக்கு அனைத்தையும் அறிந்த ஏக இறைவன்