இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் சிறையில் உயிருக்கு போராடி வரும் திண்டுக்கல் மீரான் மைதீன் சிறுநீரகம் தர முன்வந்த மஜக சகோதரன்.

image

image

திண்டுக்கல்.ஆக.01., சிறையில் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் கைதி திண்டுக்கல் மீரான் மைதீன்.

அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய முன் வருபவரை, மதுரை மத்தியச் சிறை சூப்பிரண்டு முன் ஆஜரப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற (மதுரை கிளை)
(H.C.R(M D)NO.1115/2017)
15/03/2017.அன்று உத்தரவு பிரப்பித்திருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று மதுரை மத்தியச் சிறை துணை ஜெயிலர் முன் திண்டுக்கல் மீரான் அவர்களுக்கு சிறுநீரக தானம் செய்ய உள்ள சகோதரர் மீரான் மைதீன் அவர்கள்  குடும்பத்தாருடன் ஆஜரானார்.

விபரங்களை கேட்டறிந்த துணை ஜெயிலர், அரசாங்கத்தின் பார்வைக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் முறையாக அளிப்பதாகக் கூறினார்.

இந்நிகழ்வின்போது மஜக இணைப் பொதுச் செயலாளர் KM. முகம்மது மைதீன் உலவி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் A. ஹபீபுல்லா, மதுரை வடக்கு
மாவட்ட செயலாளர்
ஷேக் அஹ்மது அப்துல்லா, தின்டுக்கல் மாநகரப் பொறுப்புக் குழு தலைவர் B. காதர்ஒலி, சிறைவாசி திண்டுக்கல் மீரான் அவர்களின் சகோதரர், அவரின் மனைவி உடன் இருந்தனர்.

கிட்னி பாதிப்பால் உயிர்க்கு போராடும் மீரான் மைதீன் அவர்களுக்கு.இறைவனிடம் மட்டும் இதற்கான கூலியை எதிர்பார்த்தவராக,,,
தனது கிட்னியில் ஒன்றை வழங்க முடிவு செய்துள்ள
இந்த சகோதரருக்கு
அனைத்தையும் அறிந்த ஏக இறைவன் இவருக்கும், இவரின் குடும்பத்தாருக்கும் இம்மையிலும் மறுமையிலும் உயரிய அந்தஸ்த்தையும், கண்ணியத்தையும் ,
உடல் ஆரோக்கியத்தையும்,
மன உறுதியையும் வழங்கவும்
இவரின் சிறுநீரகம் திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்களுக்கு பொறுந்தவும். சகோதர சகோதரிகள் அனைவரும் இறைவனிடத்தில் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்.

தகவல் :-

மஜக தகவல் தொழில்நுட்ப அணி
திண்டுக்கல் மாவட்டம்
#MJK_IT_WING
31/07/2017