அச்சன்புதூர் பேரூராட்சியில் பழுதடைந்த சுகாதாரத்துறை அலுவலகத்தை சீரமைத்துதர வலியுறுத்தி! தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் அச்சன்புதூர் பீர்மைதின், தலைமையில் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் அச்சன் புதூர் பேரூராட்சியில்
சுகாதாரத்துறை அலுவலகம் பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது இங்கு பொதுமக்களும்
மிகுந்த அச்சத்துடன் வந்து செல்கின்றனர் ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த அலுவலகத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வாவை.
இனாயத்துல்லா, அச்சன் புதூர் அஜிஸ், வடகரை செயலாளர் அலி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
06.09.2021