திருவள்ளூர் தொகுதி… இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜகவினர்_பங்கேற்பு….

மார்ச்.31.,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள்.

அதன்படி திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர். இப்ராஹீம் பேசுகையில் சசிகாந்த் செந்தில் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மீஞ்சூர் கமால், மாவட்ட பொருளாளர் அப்ரார் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி #திருவள்ளூர்_நாடாளுமன்ற_தொகுதி
#MJKitWING
30.03.2024.