வடசென்னையில்… வேட்பாளருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் மஜகவினர்….

மார்ச்.31.,

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கலாநிதி வீராசாமி அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டு வருகிறார். வேட்பாளருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட தொண்டர் படையினரும் இணைந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இந்த தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூட வைப்பது மஜக-வினரின் கடமை என்று நிர்வாகிகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#வடசென்னை_நாடாளுமன்ற_தொகுதி
#MJKitWING
31.03 2024.