ஈரோடு மாவட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம்.!

image

image

image

image

image

ஈரோடு.ஆகஸ்ட்.04., ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று (03-08-17 )
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து மஜக வினரை உற்சாகப்படுத்தினார்.

அடுத்ததாக பவானி நகருக்கு வருகை தந்தவர் அங்கிருக்கும் மஜக அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து அங்கு நடைபெறும் கட்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்து அங்கிருந்து விடைபெற்றார்.

பிறகு அந்தியூருக்கு சென்ற பொதுச்செயலாளர் அவர்களை  பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள்
சிறப்பான முறையில் வரவேற்றனர். வக்பு நிலம் ஆக்கிரப்பில் உள்ளதை
பொதுச்செயலாளருக்கு புகார் மனுவாக கொடுத்தனர்.

பிறகு அங்கு ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு இடங்களை பார்வையிட்டு, தந்த புகாரையும் ஆய்வு செய்து இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் அமைச்சர் பெருமக்களிடமும் கொண்டு
செல்வதாகவும் கூறினார்.

பிறகு சத்தியமங்கலம் வருகை தந்தவர் அங்கிருந்த பள்ளிவாசலுக்கு சென்றவர்
ஜமாத் பெரியவர்களிடமும் இளைஞர்களிடமும்
சமுதாய நலன் சார்ந்த கலந்துரையாடலை
முடித்து விட்டு,

மஜக துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாரூக் அவர்களின் வீட்டிற்கு சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையை சந்தித்து  நலம் விசாரித்தார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது
மாநில துணைச்செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா அவர்களும்,

மாநில விவசாய அணிச்செயலாளர்
நாகை முபாரக் அவர்களும்,

மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் வானவில் காதர் அவர்களும்,

ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ் அவர்களும்,

கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் அவர்களும்,

தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர் அவர்களும்,

திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WINGS
ஈரோடு மாவட்டம்,
04.08.2017