காஞ்சி.ஆக.09., காஞ்சி தெற்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா, மாவட்டச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூஸுப், மாவட்ட துணைச் செயலாளர் சர்தார் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் வருகை தந்தனர். அனைவரையும் வரவேற்ற ஜமாத் தலைவர் செய்யது ஹாரூன் அவர்கள் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். பின்னர், ஜமாத் சார்பில் பலவேறு கோரிக்கைகளை பொதுச்செயலாளரிடம் எடுத்துறைத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிறகு மஃரிப் தொழுதுவிட்டு விடை பெற்ற போது, உள்ளூர் பிரமுகர்கள் வருகைத்தந்து மஜகவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING காஞ்சி தெற்கு மாவட்டம் 09.08.17
Author: admin
கறம்பக்குடியில் மஜக மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்..!
புதுகை.ஆக.09., கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் நிலவேம்பு குடிநீர் முகாம் இன்று காலை கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கறம்பக்குடி அரசு மருத்துவமனை அலுவலர் Dr.தாஹிராபானு , சித்த பிரிவு மருத்துவர் Dr. கண்மணி மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் எவரெஸ்ட் சுரேஷ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர் . இதில் மஜக மாவட்ட துணை செயலாளர் முகம்மது ஜான் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் , சமூகநல ஆர்வலர்கள், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் பயன்பெற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கறம்பக்குடி ஒன்றியம், நகரம் புதுக்கோட்டை மாவட்டம்.
நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் முத்துப்பேட்டை வருகை! மஜக மாநில செயலாளர் வரவேற்று உரை…
#காவிரியை_மீட்போம்! #மண்ணை_காப்போம்! நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் முத்துப்பேட்டை வருகை! மஜக மாநில செயலாளர் வரவேற்று உரை... முத்துப்பேட்டை.ஆக.09., நேற்று முன்தினம் (07/08/2017) திங்கள் அன்று திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் தோழர் P.R.பாண்டியன் அவர்களின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்த நிலம் கொடா இயக்க பிரச்சார பயண வாகனம் பல்வேறு ஊர்களில் தனது பரப்புரையை செய்துகொண்டு இன்று முத்துப்பேட்டைக்கு நகருக்கு வருகை தந்தது. அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் வர்த்தக கழகத்தின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தின் போது மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் பிரச்சார பயணத்தின் நோக்கத்தையும், விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் தனது பிரச்சார உரையில் விளக்கி பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திருவாரூர் மாவட்டம். 09.08.2017
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
கோவை.ஆக.09., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆகஸ்ட் 13.08.17அன்று பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் நடைபெறும் கொடியேற்று விழாவில் அதிகமான மக்கள் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது, ஆகஸ்ட்15. 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 71 யூனிட் இரத்ததானம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது, ஆகஸ்ட்15 அன்று கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நடைபெறும் மாபெரும் மருத்துவமுகாமை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தகவல்.; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை_மாநகர்_மாவட்டம் 08.08.17
மஜகவின் கோரிக்கை ஏற்று குடியாத்தம் நகரம் 7ஆவது வார்டில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டது..!
குடியாத்தம்.ஆக.09., குடியாத்தம் நகரம் 7 வது வார்டில் தண்டுமாரியம்மன் கோவில் 2- வது தெருவில் நீண்ட நாட்களாக குடியிருப்புகள் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் கால்வாயில் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடந்தது. இதனால் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதை உடனடியாக தூர்வார்ப்பட வேண்டும் என்றும் நகராட்சி ஆணையரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக அப்பகுதியில் உள்ள பெரிய கால்வாய் நேற்று #ஜெசிபி இயந்திரம் மூலம் தூர்வரப்பட்டது. #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கும் மற்றும் நகராட்சி உதவி அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING குடியாத்தம் நகரம். 08.08.17