மஜகவின் கோரிக்கை ஏற்று குடியாத்தம் நகரம் 7ஆவது வார்டில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டது..!

image

image

image

குடியாத்தம்.ஆக.09., குடியாத்தம் நகரம் 7 வது வார்டில் தண்டுமாரியம்மன் கோவில் 2- வது தெருவில் நீண்ட நாட்களாக குடியிருப்புகள் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் கால்வாயில் செல்ல  வழியில்லாமல் தேங்கி கிடந்தது.

இதனால் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும்,
இதை உடனடியாக தூர்வார்ப்பட வேண்டும் என்றும் நகராட்சி ஆணையரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இக்கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக அப்பகுதியில் உள்ள பெரிய கால்வாய் நேற்று #ஜெசிபி இயந்திரம் மூலம் தூர்வரப்பட்டது.

#மனிதநேய_ஜனநாயக_கட்சியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கும் மற்றும் நகராட்சி உதவி அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
குடியாத்தம் நகரம்.
08.08.17