திண்டுக்கல்.ஜூலை.09., நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் V.செல்வராஜ் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டதால் மஜக மாவட்ட நிர்வாகிகள் மூலம் அரசு தலமை மருத்துவமணை அனுமதிக்கபட்டு விடு திரும்பிய ஒன்றிய செயலாளரை, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் A.அப்துல் காதர் ஜெய்லானி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.மரிய மனோஜ் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். பின்பு வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் அவர்கள் கூறுகையில் மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளதாகவும், என்னால் முடிந்தவரை மக்கள் பணியில் ஈடுபடுவேன் என கூறினார். அதற்கு பதிலலித்த மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து சமுக மக்களுக்கும் சொந்தமான கட்சி ஆகவே உங்கள் உடல்நலம் நன்றாக தேரிய பின்பு நீங்கள் உங்கள் எண்ணம் போல் மக்கள் பணியில் தாராளமா ஈடுபடலாம் என்றார். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, திண்டுக்கல் மாவட்டம். #MJK_IT_WING 09/07/2017
Author: admin
ஞானையா மரணம்! வரலாற்று ஆய்வாலரை இழந்திருக்கிறோம்..! மஜக இரங்கல்…!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை) முதுபெரும் இடது சாரி இயக்க ஊழியரும், வரலாற்று ஆய்வாளரும், பன்னூல் ஆசிரியருமான டி.ஞானையா அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி ஆழமான வருத்தங்களை அளிக்கிறது. இளம் வயது முதல் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இனைத்துக்கொண்டு அதில் செயல்வீரராகவும், சிந்தனையாளராகவும் இயங்கினார். ஜனசக்தியில் அவர் எழுதிய கட்டுரைகள் அனைவருக்கும் அரசியல் பாடங்களாக இருந்தன. அவர் எழுதிய நூல்கள் யாவும் வரலாற்று மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளாக இருந்தன. இந்திய முஸ்லிம் சமுதாயம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் யாவும், முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அனைவரும் ஆய்வு செய்யகூடிய அரிய தொகுப்புகளாக இருக்கின்றன. அவரது மரணம் இடதுசாரி இயக்கத்திற்கும் நூலக உலகிற்கும் ஒரு பெரும் இழப்பு என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து குடும்பத்தினர்கள், மற்றும் தோழர்கள் அவரது வாசகர்கள் உள்ளிட்ட அனைவரின் துயரத்திலும் மனித நேய ஜனநாயக கட்சியும் ஆழ்ந்த வருத்தத்துடன் பங்கேற்கிறது. இவன் M.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09/07/2017
மரக்கன்று நடும் விழா மஜக பொதுச் செயலாளர், மாநில பொருளாளர் பங்கேற்பு…!
கடலூர்.ஜூலை.09., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகரம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன்அன்சாரி MA.MLA மற்றும் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். உடன் மஜக மாநில செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் லால்பேட்டை நகரநிர்வாகிகள் களந்து கொண்டனர். தகவல் ; மஜக தகவல் தொழிநுட்ப அணி, #MJK_IT_WING கடலூர் தெற்கு மாவட்டம். 09.07.2017
சிறைவாசிகள் விடுதலைக்கு சாதகமான முதல்வர் பதிலுக்கு தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்..!
சென்னை.ஜூலை.08., இன்று காவல் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு எதிர்க்கட்சி திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை MGR நூற்றாண்டு விழாவையொட்டி முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரினார்கள். எப்போதுமே ஆளுங்கட்சியோடு மோதும் ஜெ. அன்பழகன் இன்று இக்கோரிக்கையை சிக்கல் இல்லாத வார்த்தைகளோடு முன்வைத்து போது அனைவரும் ஆச்சர்யத்ததோடு பார்த்தார்கள். இதற்கு பதில் அளித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் பேரறிவாளன் பரோல் குறித்து பரிசிலினையில் இருப்பதாகவும்,10 ஆண்டுகள் நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் (AGM) மற்றும் அதிகாரிகளிடம் கருத்து கேட்டிருப்பதாகவும், இது குறித்து பரிசிலிப்பதாகவும் கூறினார். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி மேஜையை தட்டி ஆதரவளித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அவையில் பேசிய முக்கிய பகுதிகள் பின்வருமாறு... மாண்புமிகு பேரவை துணை தலைவர் அவர்களே... இன்றைய தினம் சட்டப்பேரவையில் சிறைவாசிகளின் விடுதலை குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் அளித்த பதில் மகிழ்ச்சியளிக்கிறது. நானும் அண்ணன் தனியரசு, அண்ணன் கருணாஸ் அவர்களும் இக்கோரிக்கையை 15 நாட்களுக்கு
கூம்பு வடிவ ஒலிபெருக்கி விவகாரம்… தமிமுன் அன்சாரியின் கோரிக்கை பரீசீலிக்கப்படும் முதல்வர் பதில்!
சென்னை.ஜூலை.08., கோயில், பள்ளிவாசல், தேவாலயங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA சபாநாயகரிடம் கொடுத்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களிடமும் பல விளக்கங்களை எடுத்துக் கூறினார். அதாவது கூம்பு வடிவ ஒலிப் பெருக்கிகளை 70 டெசிபல் அளவுக்கு பயன்படுத்துவது அல்லது 6 மாத கால அவகாசம் கொடுத்து ஸ்பீக்கர் பாக்ஸ் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது ஆகிய இரண்டில் ஒன்றையாவது பரீசீலிக்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (08.07.17) சட்டபேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி தொடர்பாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரியின் கோரிக்கை பரீசீலிக்கப்படும் என பதிலளித்தார். தகவல்: மஜக தகவல் தொழில் நுட்பஅணி. சட்டமன்ற செய்தியாளர் குழு. சென்னை. 08.07.2017