வேதாரண்யம்.ஜூலை.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் பணியாற்றிவரும் மாநில துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ்வின் தம்பி பொறியாளர் ஹம்தான் அவர்களின் திருமணம் நேற்று (30.07.2017) தோப்புத்துறையில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க மஜக தலைவர்கள் தோப்புத்துறைக்கு வருகை தந்தனர். இந்த திருமண நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் , கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் உ.தனியரசு MLA அவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினர். இதில் மஜக பொருளாளர் SS.ஹாரூண் ரசீது , தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் , இணை பொதுச் செயலாளர் மைதீன் உலவி , துணை பொதுச் செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர் ஷா, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜூதீன், தைமிய்யா, ராசுதீன், மாநில துணைச் செயலாளர்கள் திண்டுக்கல் அன்சாரி, புதுமடம் அனீஸ், சமீம் அகமது , மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோட்டை ஹாரிஸ் , தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் வானவில் காதர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் கலந்து
Author: admin
பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுடன் நாகை MLA சந்திப்பு !
நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட ஆரிய நாட்டுத் தெருவைச் சேர்ந்த 8 மீனவர்களை கடந்த வாரம் இலங்கை ராணுவம் கைது செய்து சிறை வைத்திருக்கிறது . இன்று ஆரிய நாட்டுத் தெருவுக்கு வருகை தந்து சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு நாகை MLA ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளையும் வழங்கினார். ஆரிய நாட்டுத் தெரு மற்றும் அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நாகை மாவட்ட மீனவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிறுப்பதாகவும் விரைவில் விடுதலை சாத்தியமாகும் என்றும் M.தமிமுன் அன்சாரி MLA கூறினார். கடந்த வாரம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த இலங்கை சிறையிலிருக்கும் 8 மீனவர்களின் குடும்பத்தையும் சந்தித்து M.தமிமுன் அன்சாரி MLA ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழக்கியது குறிப்பிடத்தக்கது. தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 26.07.17
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளை நடத்திய சுதந்திர தின கருத்தரங்கம்.
குவைத்.ஜூலை.31., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளையின் சார்பாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுதந்திர இந்தியாவின் அவல நிலை" கருத்தரங்கம் 28/07/2017 வெள்ளிக் கிழமை அன்று மஹபுல்லாவில் மண்டல து.செயளாலர் சகோ. நெல்லை வாஹிது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கிளை து.செயளாலர் சகோ. ஏர்வாடி ஹசன் இபுறாஹிம் அவர்கள் நீதி போதனை நிகழ்த்தி துவைக்கி வைக்க. கிளை பொருளாளர் சகோ. கோட்டைபட்டினம் ஜாபர் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகிக்க. மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் இன்றைய தமிழகத்தின் அரசியல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் மீண்டும் வேண்டும் சுதந்திர போராட்டம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக கிளை செயளாலர் சகோ. கோட்டைபட்டினம் அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை கூறினார். இதில் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தகவல்; மனிதநேய கலாச்சார பேரவை (மனிதநேய ஜனநாயக கட்சி) #MJK_IT_WING குவைத் மண்டலம். 55278478-60338005-65510446.
திண்டுக்கல் மாவட்டம் அரசு பள்ளிக்கூடத்திற்கு மஜக -சார்பில் நாற்காலி வழங்கப்பட்டது.
திண்டுக்கல், ஜூலை.31., முன்பு வாக்குறுதி அளித்ததின் பெயரில் திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பூச்சிநாயக்கன் பட்டியில் உள்ள அரசு பள்ளிகூடத்திற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாற்காலிகள் (சேர்கள்) இன்று வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, நகர பொறுப்பு குழு தலைவர் B.காதர் ஒலி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்னும் சில தினங்களில் மீதமுள்ள ( மைக்செட் ) பொருட்களை பள்ளிக்கூட நிர்வாகத்திடம் கொடுக்கபடும். தகவல்:- தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மாவட்டம் #MJK_IT_WING 31/07/2017
டிடிவி தினகரனுடன் மஜக தலைவர்கள் சந்திப்பு…
தஞ்சை.ஜூலை.29., அதிமுக துணை பொதுச் செயலாளர் சகோ.டிடிவி. தினகரனுடைய மாமியார் மரணமடைந்ததையொட்டி ஆறுதல் கூறுவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர் ஆகியோர் இன்று காலை தஞ்சாவூர் வருகை தந்து அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். இச்சந்திப்பு சுமார் 45நிமிடங்கள் நடைபெற்றது. அவர்களுடன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வல்லம் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகைதீன் , நகர செயலாளர் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, தஞ்சை தெற்கு மாவட்டம். #MJK_IT_WING. 29.07.2017