பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுடன் நாகை MLA சந்திப்பு !

image

image

image

நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட ஆரிய நாட்டுத் தெருவைச் சேர்ந்த 8 மீனவர்களை கடந்த வாரம் இலங்கை ராணுவம் கைது செய்து சிறை வைத்திருக்கிறது .

இன்று ஆரிய நாட்டுத் தெருவுக்கு வருகை தந்து சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு நாகை MLA ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

ஆரிய நாட்டுத் தெரு மற்றும் அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நாகை மாவட்ட மீனவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிறுப்பதாகவும் விரைவில் விடுதலை சாத்தியமாகும் என்றும் M.தமிமுன் அன்சாரி MLA கூறினார்.

கடந்த வாரம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த இலங்கை சிறையிலிருக்கும் 8 மீனவர்களின் குடும்பத்தையும் சந்தித்து M.தமிமுன் அன்சாரி MLA ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழக்கியது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
26.07.17