குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளை நடத்திய சுதந்திர தின கருத்தரங்கம்.

image

image

குவைத்.ஜூலை.31., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளையின் சார்பாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதந்திர இந்தியாவின் அவல நிலை” கருத்தரங்கம் 28/07/2017 வெள்ளிக் கிழமை அன்று மஹபுல்லாவில் மண்டல து.செயளாலர் சகோ. நெல்லை வாஹிது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக கிளை து.செயளாலர் சகோ. ஏர்வாடி ஹசன் இபுறாஹிம் அவர்கள் நீதி போதனை நிகழ்த்தி துவைக்கி வைக்க. கிளை பொருளாளர் சகோ. கோட்டைபட்டினம் ஜாபர் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகிக்க. மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் இன்றைய தமிழகத்தின் அரசியல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் மீண்டும் வேண்டும் சுதந்திர போராட்டம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

இறுதியாக கிளை செயளாலர் சகோ. கோட்டைபட்டினம் அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை கூறினார். இதில் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தகவல்;
மனிதநேய கலாச்சார பேரவை
(மனிதநேய ஜனநாயக கட்சி)
#MJK_IT_WING
குவைத் மண்டலம்.
55278478-60338005-65510446.