அதிராம் பட்டினம் தொடர் போராட்டத்தில்.. மஜக அவைத் தலைவர் நாசர் உமரி பங்கேற்று கண்டன உரை!

அதிரை.மார்ச் 13,
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தர்ணா போராட்டம் 19/02/2020 முதல் நடைப்பெற்று வருகிறது.

இப்போராட்ட களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் எஸ்.எஸ்.நாசர் உமரி அவர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

தனது உரையின் இடையே கண்டன முழக்கங்களை எழுப்பி அதனை போராட்டக்காரர்களை திரும்ப முழங்கிட செய்து போராட்ட களத்திற்கு எழுச்சியூட்டினார்.

இதில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலர் சாகுல் ஹமீது (ஸ்மார்), ஜித்தா மண்டல பொருளாளர் அதிரை சேக், நகர செயளாலர் அப்துல் சமது, நகர பொருளாளர் அஷ்ரப் மற்றும் அதிரை மஜகவினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சைதெற்குமாவட்டம்.