திருப்பூர் ஷாகின்பாக் தொடர் தர்ணா போராட்டத்தில்.! கொள்கைவிளக்க மாநிலசெயலாளர் கோவைநாசர் அவர்கள் பங்கேற்பு..!

திருப்பூர்.மார்ச்.13,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக திருப்பூரில் திருச்சி சாலையில் தொடர் காத்திருப்பு போராட்டம் 27 வது நாளாக மிகுந்த வீரியத்துடன்
நடைபெற்று வருகிறது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை T.A.நாசர் அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபல் ரிஸ்வான், பொருளாளர் ஆசீக், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்கர், துணைச் செயலாளர் யாக்கூப், வர்த்தக அணி பொருளாளர் சேக் ஒலி,
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர்காதர்கான், மற்றும் கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
12-03-2020