தாகத்தை தணிக்க முந்திக்கொண்ட முத்துப்பேட்டை! மஜகசார்பில் தண்ணீர்பந்தலை மாநிலசெயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் திறந்து_வைத்தார்.

மார்ச் 13,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சீரிய தலைமையின் சிறப்புமிகு வழிக்காட்டலை ஏற்று கடந்தாண்டுகளை போன்று இவ்வாண்டும் கோடை தொடக்கத்திலேயே மஜக சார்பில் தண்ணீர் பந்தல் முத்துப்பேட்டை நகரம் சார்பில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மஜக நகர செயலாளர் பால்கார மைதீன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் கலந்து கொண்டு கொய்யா முக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

தொடர்ந்து மக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் மற்றும் குளிர்பானங்கள் பயணிகள், பாதச்சாரிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டது.

இதில், நகர பொருளாளர் பசீர் அலி உள்ளிட்ட மஜகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இத்தண்ணீர் பந்தலானது தொடர்ந்து கோடைக்காலம் முழுவதும் தாகம் வகையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING | #முத்துப்பேட்டை_பேரூர்.
#திருவாரூர்_மாவட்டம்.