நாட்டின் ஜன நாயகத்தை மத்திய அரசு அச்சுறுத்தல்களைக் கொண்டு கேள்விக் குறியக்கியுள்ளது..! புளியந் தோப்பு போராட்டகளத்தில் புதுமடம் அணீஸ் கண்டன உரை..!

சென்னை.மார்ச்.13.,

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சென்னை புளியந்தோப்பில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

இதில் நேற்று (12-03-2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் பங்கேற்று ஜனநாயகவாதிகளின் குரல்களை, அச்சுறுத்தலைக் கொண்டு மத்திய அரசு நெறுக்குவதாகவும், நாட்டில் ஜனநாயகம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்றும் பேசினார்.

இந்நிகழ்வில் மஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, மாவட்ட துணைச் செயலாளர் ரசாக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வடசென்னைமேற்குமாவட்டம்
12-03-2020