தூத்துக்குடியில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!!


அக்.11.,

தூத்துக்குடி மாவட்டம்
பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட மனீஷா, என்ற தலித் பெண்ணின் மரண த்திற்க்கு நீதி வேண்டியும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்ற வாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன், அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் அனைத்து கட்சி, இயக்க, பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

மஜக சார்பில் மாநகர செயலாளர் ஹச்சி முகம்மது, நாகை திட்டச்சேரி நூருல் அமீன், நகர நிர்வாகிகள் செல்வம், ஜெஸ்வின், ஷாருக்கான், மற்றும் அழகுராஜ், மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_மாவட்டம்
11.10.2020