தூத்துக்குடி.ஆக.27., நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து ஆறுமுகநேரி வழியாக சென்னைச் செல்லும் எஸ்.ஆா்.எம். தனியார் பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் அப்பாப்பள்ளித் தெருவைச் சேர்ந்த பத்ருத்தீன் அவர்களின் மகன் மீராத்தம்பி என்பவர் பயணத்திருக்கிறார். அதே பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்யை சேர்ந்த சமூக விரோதிகளான ரவுடிகள் இரண்டு பேர் குடிபோதையில் பேருந்தில் பயணித்துள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி குடிபோதையில் இருந்தவர்கள் வாந்தி எடுக்க அது மீரா தம்பி மீது தெறிக்க, வண்டியை ஓரமாக நிறுத்தி வாந்தி எடுத்திருக்க லாமே....என்று சொல்ல சற்று வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் பயணம் தொடர, தூத்துக்குடியில் வண்டி நிறுத்தப்பட, தனது உடையை சுத்தம்செய்யவும், சிறுநீர் கழிப்பதற்காகவும் வண்டியை விட்டு கீழே இறங்கியவரை பின் தொடர்ந்த ரவுடிகள், நொடிப் பொழுதில், கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்தி விட்டு இருளில் மாயமாய் மறைந்து தப்பி ஓடி விட்டனர். அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காவல் துறைக்கு தகவல் போக விரைந்து வந்த காவல்துறை யினர், மரணித்தவரை தூத்துக்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தின் மேல் நடவடிக்கைக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமாகிய தமீமுன் அன்சாரி அவர்கள் முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளிடத்திலும், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்துள்ளனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம். 27.08.17
Author: admin
நீட் தேர்விற்கெதிராக ஓமந்தூரார் தோட்டத்தை முற்றுகையிட்ட மாணவர் இந்தியாவினர் கைது..!
சென்னை.ஆக.27., சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில கல்வி உரிமைக்கும் எதிரான நீட் தகுதித்தேர்வை மத்திய அரசு திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகி, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையும் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெற்று வருகின்றது. நீட் தேர்விற்கு எதிராகவும், மாணவர் சேர்க்கை நடைபெறுவதை கண்டித்தும் ஓமந்த்தூரார் தோட்டம் முன் மாணவர் இந்தியா சார்பில் மாணவர் முற்றுகை போராட்டம் இன்று காலை நடைபெற்று ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இப்போரட்டத்திற்கு மாணவர் இந்தியாவின் மாநில செயலாளர் A.அசாருதீன் தலைமை தாங்கினார், உடன் மாநில பொருளார் A.ஜாவித் ஜாபர், மாநில துணைச் செயலாளர்களான SG.அப்சர் சையத், S.பஷிர் அஹமத் மற்றும் மாவட்ட நிர்வாகிகளான N.கபிர் அஹ்மத், I.அலாவுதீன், KM.அன்வர் இஸ்மாயில் , V.ரமேஷ், ஊடக பொறுப்பாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டு கைதாகினர். இப்போரட்டத்தில் கைது செய்யப்பட்டோரை மஜக-வின் மாநில செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார். உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பங்கேற்றார். தகவல்; ஊடகபிரிவு, மாணவர் இந்தியா தலைமையகம், சென்னை 27.08.17
நெய்வேலி மஸ்ஜித் ரஹமத் பள்ளிவாசலில் மஜக மாநில பொருளாளருக்கு உற்சாக வரவேற்ப்பு.!
கடலூர்.ஆக.27., நெய்வேலியில் நேற்று முன்தினம் 25/08/17 வெள்ளியன்று பல்வேரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள். ஜூம்மா தொழுகைக்காக நெய்வேலி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளிவாசலுக்கு சென்றார் இதை அறிந்த பள்ளி நிர்வாகிகள் தொழுகை முடிந்தவுடன் பள்ளியில் மஜக பொருளாளரை வரவேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள். பிறகு ஜமாத்தலைவர் ஹாஜி S.M.அபுபக்கர் அவர்கள் தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளிவாசல் அருகில் உள்ள அர் ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளி கட்டுமான பணிக்காக மஜக மாநில பொருளாளரிடம் கோரிக்கை வைத்தனர். அர்ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு சென்ற மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் பள்ளி கட்டித்தை பார்வையிட்டு கட்டுமானபணிக்காக உதவிசெய்வதாக கூறினார். இச்சந்திப்பில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், அன்வர்தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம். 26.08.17
மஜக குடியாத்தம் நகர ஆலோசனை கூட்டம்…
வேலூர்.மே.26., குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் MBS- நகரில் நகர செயலாளர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டர். குடியாத்தம் நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளைகள் பலப்படுத்துவதும், அதிக உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளவும், இரு இடங்களில் கொடியேற்றவும், நகர மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அதனை சீர் செய்ய வேண்டும் என்றும், குடியாத்தம் நகரத்தில் மஜகவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடந்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜினத் T.ஜாபர் என்பவர் தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார். சென்ற வாரம் மிகச் சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாமில், சிறப்பாக பணிகளை மேற்கொண்ட நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு குடியாத்தம் நகரம் சார்பாக நன்றியைத் தெரிவித்தனர். இதில் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாம்முத்தீன், நகர பொருளாளர் V.முபாரக் அஹ்மத், நகர துணை செயலாளர் N.சலிம், நகர இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கெளவுஸ், நகர இளைஞர் அணி துணை செயலாளர் M.பாலாஜி, கிளை செயலாளர் N.அல்தாப், கிளை நிர்வாகிகள் ரஹ்மான், சித்திக், சாதிக், முபாரக், ஷபிக்,
ஓமந்தூரார் மாளிகை முற்றுகை…! மாணவர் இந்தியா அழைக்கிறது..!!
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதை கண்டித்து ஓமந்தூரார் மாளிகை முன் மாணவர் இந்தியா சார்பில் மாணவர்கள் முற்றுகை. இடம் : ஓமந்தூரார் மாளிகை, சிம்சன் பேருந்து நிறுத்தம், மௌன்ட் ரோடு நாள் : 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு இறைவன் நாடினால் தமிழக மாணவர்களின் உரிமையை மீட்க மாணவச்செல்வங்களே அணிதிரள்வீர்.. தொடர்புக்கு ; 9940311477, 9943636483, 9840351764, 8608571139