நீட் தேர்விற்கெதிராக ஓமந்தூரார் தோட்டத்தை முற்றுகையிட்ட மாணவர் இந்தியாவினர் கைது..!

image

image

சென்னை.ஆக.27., சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில கல்வி உரிமைக்கும் எதிரான நீட் தகுதித்தேர்வை மத்திய அரசு திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகி, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையும்  சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெற்று வருகின்றது.

நீட் தேர்விற்கு எதிராகவும், மாணவர் சேர்க்கை நடைபெறுவதை கண்டித்தும் ஓமந்த்தூரார் தோட்டம் முன் மாணவர் இந்தியா சார்பில் மாணவர் முற்றுகை போராட்டம் இன்று காலை நடைபெற்று ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இப்போரட்டத்திற்கு மாணவர் இந்தியாவின் மாநில செயலாளர் A.அசாருதீன் தலைமை தாங்கினார், உடன் மாநில பொருளார் A.ஜாவித் ஜாபர், மாநில துணைச் செயலாளர்களான SG.அப்சர் சையத், S.பஷிர் அஹமத் மற்றும் மாவட்ட நிர்வாகிகளான  N.கபிர் அஹ்மத், I.அலாவுதீன், KM.அன்வர் இஸ்மாயில் , V.ரமேஷ், ஊடக பொறுப்பாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டு கைதாகினர்.

இப்போரட்டத்தில் கைது செய்யப்பட்டோரை மஜக-வின் மாநில செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார். உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பங்கேற்றார்.

தகவல்;
ஊடகபிரிவு,
மாணவர் இந்தியா தலைமையகம்,
சென்னை
27.08.17