காயல்பட்டினம் இளைஞர் படுகொலை..! குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய மஜக பொதுச் செயலாளர் வலியுறுத்தல்…!!

image

image

தூத்துக்குடி.ஆக.27., நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து
ஆறுமுகநேரி வழியாக சென்னைச் செல்லும் எஸ்.ஆா்.எம். தனியார் பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம்  அப்பாப்பள்ளித் தெருவைச் சேர்ந்த பத்ருத்தீன் அவர்களின்  மகன் மீராத்தம்பி என்பவர் பயணத்திருக்கிறார். அதே பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்யை சேர்ந்த சமூக விரோதிகளான ரவுடிகள் இரண்டு பேர் குடிபோதையில் பேருந்தில் பயணித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறி குடிபோதையில்  இருந்தவர்கள்
வாந்தி எடுக்க அது மீரா தம்பி மீது
தெறிக்க, வண்டியை ஓரமாக
நிறுத்தி வாந்தி எடுத்திருக்க
லாமே….என்று சொல்ல சற்று வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

அதன்பின் பயணம் தொடர,  தூத்துக்குடியில் வண்டி
நிறுத்தப்பட, தனது உடையை சுத்தம்செய்யவும், சிறுநீர் கழிப்பதற்காகவும் வண்டியை விட்டு கீழே இறங்கியவரை பின்
தொடர்ந்த ரவுடிகள், நொடிப்
பொழுதில், கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்தி விட்டு இருளில் மாயமாய் மறைந்து தப்பி
ஓடி விட்டனர். அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காவல் துறைக்கு தகவல் போக
விரைந்து வந்த காவல்துறை
யினர், மரணித்தவரை
தூத்துக்குடி மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தின் மேல் நடவடிக்கைக்காக
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும்
நாகை சட்டமன்ற உறுப்பினருமாகிய தமீமுன் அன்சாரி அவர்கள் முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளிடத்திலும்,  தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி மாவட்டம்.
27.08.17