மஜக சார்பில் தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் வினியோகம்! மாநில துணை செயலாளர் சாகுல் அமீது பங்கேற்பு! நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி புறநகர் மாவட்டம் சார்பில் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப், தலைமை தாங்கினார் மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப், முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் குருகை.ராசுக்குட்டி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் N.M.தமிமுல் அன்சாரி, அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது அவர்கள் மரக்கன்றுகள் விநியோகத்தை துவக்கி வைத்தார். காயல்பட்டினம் நகர செயலாளர் இப்னு மாஜா, நன்றியுரை யாற்றினார் இந்த நிகழ்வில் காயல்பட்டினம் நகர பொருளாளர் மீரான், நகர நிர்வாகிகள் ஜியாவுதீன்,சம்சுக்கனி, இர்ஷாத், பக்கீர், சித்திக், இஸ்மாயில், உள்ளிட்ட மஜகவினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம் 15-08-2021
Tag: India
அதிரையில் மஜக ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா!
75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் அதிராம்பட்டினம் MJTS ஆட்டோ நிறுத்தத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் அதிரை மஜக நகர செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மஜக நகர நிர்வாகிகள் மற்றும் MJTS ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
75வது சுதந்திர தின விழா! விருது நகரில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேசன் ராஜா, ராஜபாளையம் நகர செயலாளர் சம்சுதீன், மற்றும் மாவட்ட ஒன்றிய, பகுதி, கழக, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 15.08.2021
காட்டுமன்னார்கோயிலில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!
75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காட்டுமன்னார்கோயில், ரம்ஜான் தைக்காலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹூசைன் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தேசிய கொடிகளுடன் முக கவசங்கள் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன், கிளை செயலாளர் ரிபாயத்துல்லா, கிளை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் விநியோகம்… தோப்புத்துறையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…
இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவள விழா மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மரக்கன்றுகள் விநியோகம், ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உணவிடுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என மஜகவினர் சுதந்திர தின பவள விழாவை தேசிய கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர். இன்று காலை தோப்புத்துறையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசிய கொடி ஏற்றினார். அப்போது உறுதி மொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது. பிறகு அனைவருக்கும் சந்தனம், செம்மரம், நெல்லி மரக்கன்றுகள் வழங்கி மஜகவினர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். முக்கிய சேவகர்களுக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்பட்டது. கொரோனாவில் ஆதரவற்றவர்களுக்கு பணியாற்றிய ஈகா தர்ம ஸ்தாபன நிர்வாகி R.மோகன ராஜசேகரன், கொரணாவில் மருத்துவ பணியாற்றிய ஜலால், சதாம், இம்தியாஸ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பொதுச் செயலாளர் சிறப்பு செய்தார். இந்நிகழ்வுக்கு மாவட்ட துணைச் செயலாளர் அகமதுல்லா தலைமை தாங்கிட, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர், நகரச் செயலாளர் முகம்மது ஷெரிப் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஜமாத் தலைவர்