75வது சுதந்திர தின விழா! விருது நகரில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேசன் ராஜா, ராஜபாளையம் நகர செயலாளர் சம்சுதீன், மற்றும் மாவட்ட ஒன்றிய, பகுதி, கழக, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருதுநகர்_மாவட்டம்
15.08.2021