காட்டுமன்னார்கோயிலில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!

75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காட்டுமன்னார்கோயில், ரம்ஜான் தைக்காலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹூசைன் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு தேசிய கொடிகளுடன் முக கவசங்கள் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன், கிளை செயலாளர் ரிபாயத்துல்லா, கிளை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.