தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் விநியோகம்… தோப்புத்துறையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவள விழா மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மரக்கன்றுகள் விநியோகம், ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உணவிடுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என மஜகவினர் சுதந்திர தின பவள விழாவை தேசிய கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர்.

இன்று காலை தோப்புத்துறையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்.

அப்போது உறுதி மொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது.

பிறகு அனைவருக்கும் சந்தனம், செம்மரம், நெல்லி மரக்கன்றுகள் வழங்கி மஜகவினர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

முக்கிய சேவகர்களுக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்பட்டது.

கொரோனாவில் ஆதரவற்றவர்களுக்கு பணியாற்றிய ஈகா தர்ம ஸ்தாபன நிர்வாகி R.மோகன ராஜசேகரன், கொரணாவில் மருத்துவ பணியாற்றிய ஜலால், சதாம், இம்தியாஸ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பொதுச் செயலாளர் சிறப்பு செய்தார்.

இந்நிகழ்வுக்கு மாவட்ட துணைச் செயலாளர் அகமதுல்லா தலைமை தாங்கிட, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர், நகரச் செயலாளர் முகம்மது ஷெரிப் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக ஜமாத் தலைவர் ஜபருல்லா, சமூக ஆர்வலர் வை.சுப்ரமணியம், முன்னாள் ஜமாத் தலைவர் KMKI நவாஸ்தீன், AR.ஷேக், ஜமாத் செயலர் ஆசிரியர் ஜெய்னுதீன், வணிகர் சங்க தலைவர் A. நஜீப், MM.அப்துல் சலாம், VS.வெங்கடாச்சலம், V .நிஜாம், KM.சாகுல் ஹமீது பாக்கவி, S.சபீர் அகமது, H.நெய்னா முகமது மற்றும் மஜக வினர் உள்ளிட்ட பெரும் திரளானோர் பங்கேற்றார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.