காயல்பட்டினத்தில் 75வது சுதந்திர தின விழா!

மஜக சார்பில் தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் வினியோகம்! மாநில துணை செயலாளர் சாகுல் அமீது பங்கேற்பு!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி புறநகர் மாவட்டம் சார்பில் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப், தலைமை தாங்கினார்
மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப், முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் குருகை.ராசுக்குட்டி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் N.M.தமிமுல் அன்சாரி, அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது அவர்கள் மரக்கன்றுகள் விநியோகத்தை துவக்கி வைத்தார்.

காயல்பட்டினம் நகர செயலாளர் இப்னு மாஜா, நன்றியுரை யாற்றினார்

இந்த நிகழ்வில் காயல்பட்டினம் நகர பொருளாளர் மீரான், நகர நிர்வாகிகள் ஜியாவுதீன்,சம்சுக்கனி, இர்ஷாத், பக்கீர், சித்திக், இஸ்மாயில், உள்ளிட்ட மஜகவினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
15-08-2021