கோவை.மே.02., மே 01 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கிணத்துகடவு பகுதி செயலாளர் ஹாருண்ரஷீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, அவர்கள் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் PM.முகம்மது ரபீக், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், பகுதி பொருளாளர் காதர், துணை செயலாளர் அபு, மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாவட்டம் 01.05.18
Tag: மஜக
மஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..!
சென்னை.ஏப்.25., #மனிதநேய_ஜனநாயக_கட்சி தலைமையகத்தில் மாநில #இளைஞரணி நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப்பொதுச்செயலாளர் மண்டலம் S.M. ஜைனுல்லாபுதீன் மற்றும் மாநிலச்செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இளைஞரணி மாநில செயலாளர் S.G.அப்சர் சையத், மாநில பொருளாளர் A.மன்சூர் அஹ்மத், மாநில துணைச்செயலாளர்கள் தாம்பரம் தாரிக் மற்றும் N. அன்வர் பாஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் வருங்காலத்தில் செய்ய வேண்டிய செயல் திட்டங்களும், தீர்மானங்களும் கிழ்கண்டவாறு நிறைவேற்றப்பட்டது. #செயல்_திட்டங்கள்:- 1. இளைஞர் அணி சார்பாக பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசியல் கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் நடத்துதல். 2.சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல். 3. அனைத்து மாவட்ட வாரியாக இளைஞரணி நிர்வாகிகளை மிக விரைவாக நியமித்தல். 4.மாதத்திற்கு ஒரு முறை இளைஞர் அணி நிர்வாக ஆலோசனை கூட்டம் நடத்துதல். 5. மிக விரைவில் இளைஞரணி மாநில செயற்குழு நடத்துதல். 6. நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க , பசுமையான மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க மஜக இளைஞர் அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்று நடுதல். 7. இளைஞர்கள் மத்தியில்
மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக SDPI ஆர்ப்பாட்டம்..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!
நாகை. ஏப்.24.,இன்று நாகூரில் மார்க் துறைமுகத்திற்க்கு எதிராக SDPI கட்சி நடத்திய நிலக்கரி தடை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மஜக சார்பாக நாகூர் நகர செயலாளர் H.ஷேக் இஸ்மாயில் தலைமையில், நகர பொருளார் முஹம்மது இபுராஹிம், முன்னாள் செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, தம்மாம் மண்டலம் முன்னால் துணை செயலாளர் H,ஜாகிர் உசேன், முஹம்மது மஸ்தான், சதாம் உசேன், IKP கலிமுல்லாஹ், செல்லாப்பா, செய்யது இபுராஹிம், நூர்சாதிக், செய்யது மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 24.04.2018
பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்..! தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA வேண்டுகோள்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை..) பாஜக பிரமுகர்களான H.ராஜா அவர்களும், S.V சேகர் அவர்களும் சமீபத்தில் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் நேர்மையான அரசியலுக்கும், நாகரீக பொதுவாழ்வுக்கும் எதிரானதாகும். பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சமூகமே, நாகரீக சமூகமாகும். பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் நபர்கள் இத்தகைய பட்டியலில் இடம் பெற முடியாது. S.V.சேகர் அவர்கள் வேறு ஒருவருடைய கருத்தை, கவனக்குறைவாக பகிர்ந்ததாக கூறியதை ஏற்காத, பத்திரிக்கையாளர்கள் அவர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் சிலர் கோபத்தில் கல்வீச்சில் ஈடுபட்டது ஏற்புடைய செயல் அல்ல, அதே நேரம் H. ராஜா அவர்களையும், S.Vசேகர் அவர்களையும் கைது செய்ய தயங்கும் காவல்துறை, S.V சேகர் வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய பத்திரிக்கையாளர்களை மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய துடிப்பதன் பிண்ணனி என்ன? என்பதை அறிய விரும்புகிறோம். டெல்லியிலிருந்து, தமிழகத்தில் செயல்படும் ஊடகளுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் திட்டமிட்டு கொடுக்கப்படும் நெருக்கடிகளை தமிழகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு, இவ்விஷயத்தில்
மஜக 3ஆம் ஆண்டு துவக்க விழா.! கத்தாரில் MKP சனாயா மண்டலம் நடத்திய இரத்த தான முகாம்…!!
கத்தார்.ஏப்.23., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மூன்றாம் ஆண்டு துவாக்கத்தை முன்னிட்டு அதன் வெளிநாடுகள் பிரிவான #மனிதநேய _கலாச்சார_பேரவை (MKP) கத்தார் சனாயா மண்டலம் #இரத்த_தான முகாம் சார்பில் நடைபெற்றது. இரத்த தான முகாமை #கத்தார் அலோசகர் கீழக்கரை ஹூசைன் துவக்கிவைத்தார். சனாயா மண்டல செயலாளர் நூர் முஹம்மத் தலைமை தாங்கினார். இதில் சனாயா மண்டல பொருளாளர் காட்டுமன்னார் கோயில் ஓளியுள்ளா, துஹைல் மண்டல செயலாளர் ஹாஜ் முஹம்மத், தோஹா மண்டல செயலாளர் பொதக்குடி புர்ஹானுதீன், சனாயா மண்டல துணை செயலாளர் முத்துப்பேட்டை யூனுஸ், அணி Al million நிர்வாகிகளாகிய திருமங்களம் சுந்தர்., வீரபாண்டி, மேலும் கத்தார் செயலாளர் உத்தமபாளையம் உவைஸ், கத்தார் பொருளாளர் ஆயங்குடி யாசீன், கத்தார் ஒருங்கிணைப்பாளர் நெல்லை KST அப்துல அஜீஸ், துணை செயலாளர்கள் தைக்கால் சகாபுதீன், புதுமடம் பைஸல், மீசல் செய்யது கனி, சந்கேந்தி சமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பல தோழமைச்சகோதரர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மிகவும் ஆர்வத்துடன் இரத்ததானம் கொடுத்தனர். தகவல் : #MKP_IT_WING #MKP_சனாயா_மண்டலம் #கத்தார்_மனிதநேய_கலாச்சார_பேரவை