மஜக 3ஆம் ஆண்டு துவக்க விழா.! கத்தாரில் MKP சனாயா மண்டலம் நடத்திய இரத்த தான முகாம்…!!

கத்தார்.ஏப்.23., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மூன்றாம் ஆண்டு துவாக்கத்தை முன்னிட்டு அதன் வெளிநாடுகள் பிரிவான #மனிதநேய _கலாச்சார_பேரவை (MKP) கத்தார் சனாயா மண்டலம் #இரத்த_தான முகாம் சார்பில் நடைபெற்றது.

இரத்த தான முகாமை #கத்தார் அலோசகர் கீழக்கரை ஹூசைன் துவக்கிவைத்தார். சனாயா மண்டல செயலாளர் நூர் முஹம்மத் தலைமை தாங்கினார்.

இதில் சனாயா மண்டல பொருளாளர் காட்டுமன்னார் கோயில் ஓளியுள்ளா, துஹைல் மண்டல செயலாளர் ஹாஜ் முஹம்மத், தோஹா மண்டல செயலாளர் பொதக்குடி புர்ஹானுதீன், சனாயா மண்டல துணை செயலாளர் முத்துப்பேட்டை யூனுஸ், அணி Al million நிர்வாகிகளாகிய திருமங்களம் சுந்தர்., வீரபாண்டி, மேலும் கத்தார் செயலாளர் உத்தமபாளையம் உவைஸ், கத்தார் பொருளாளர் ஆயங்குடி யாசீன், கத்தார் ஒருங்கிணைப்பாளர் நெல்லை KST அப்துல அஜீஸ், துணை செயலாளர்கள் தைக்கால் சகாபுதீன், புதுமடம் பைஸல், மீசல் செய்யது கனி, சந்கேந்தி சமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் பல தோழமைச்சகோதரர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மிகவும் ஆர்வத்துடன் இரத்ததானம் கொடுத்தனர்.

தகவல் :
#MKP_IT_WING
#MKP_சனாயா_மண்டலம்
#கத்தார்_மனிதநேய_கலாச்சார_பேரவை